Wednesday 26 June 2013

யாக்கோபுவும் ஏசாவும் விநாயகரும் முருகரும் ஞானப்பழக்கதையும்...

ஆபிரகாமின் மகனான ஈசாக்கிற்கு வயதாகி கண் மங்கலாக தெரியும் போது, அவருடைய முத்த மகனு “ஏசா”வுக்கு கொடுக்க வேண்டிய வரங்களை இளைய மகன் ”யாக்கோபு”, அண்ணன் ஏசா மாதிரி வேசம் போட்டு தந்தையிடம் ஏமாற்றி வாங்கிவிடுகிறான்.

யாக்கோபு ”அம்மா செல்லம்” என்பதால் இது அம்மா ரெபெக்காவும் உடந்தை. 

ஏசா கஸ்டபட்டு வேட்டைக்கு போய் தந்தைகாக விலங்கு தேட, 

ரெபெக்கா யாக்கோபைவை மந்தையிலிருந்து கொழுத்த ஆடுகளை கொண்டு வரச்செய்து சுவையாக சமைத்து ஈசாக்குகிற்கு பரிமாறச்செய்கிறாள்.

ஈசாக்கு வரம் கொடுக்குமுன் யாக்கோபுவின் குரலை கேட்டு “உன் குரல் ஏசா குரல் மாதிரி இல்லையே பக்கத்தில் வா” என்கிறார்.

யாக்கோபிற்கு ஒரே டென்சன்.பக்கத்தில் வந்து தொட்டுப்பார்த்தால் ஈசாக் கண்டுபிடித்து விடுவார்.

ஏனென்றால் அண்ணன் ஏசாவின் உடலில் அடர் ரோமங்கள் இருக்கும்.யாக்கோபின் உடல் பளபளப்பாய் இருக்கும்.

அப்போது தாய் ரெபெக்கா யாக்கோபுக்கு ஆட்டின் ரோமம் உடைய தோலை போர்த்திவிடுகிறாள்.

ஈசாக் அந்த ஆட்டு ரோமத்தை தொட்டுப் பார்த்துவிட்டு, ஆகா இது மூத்த மகன் ஏசாவோட முடிதான் என்று ஏமாந்து விடுகிறார்.

வரம் கொடுத்து விடுகிறார்.

கிட்டதட்ட, திருவிளையாடல் மாம்பழக்கதையோட இத ஈக்குவேட் செய்யலாம் ( நிறைய பேராமீட்டர்ஸை நெக்லட் செய்தால்).

ஆனா ரெபெக்காவ செய்த காரியத்த பார்வதி செய்யல.

ஏசாவை முருகர் கூடவும். யாக்கோபுவை பிள்ளையார் கூடவும் ஒப்பிடலாம்.

ஆனா அங்க ஏசா மூத்தவர்.இங்க முருகர் இளையவர்.

ஏசா கஸ்டப்படு வேட்டையாடுகிறார்.முருகர் மயில்வாகனத்தில் உலகை சுற்ற போய்விடுகிறார்.

அங்க யாக்கோபு இளையவர்.இங்க பிள்ளையார் மூத்தவர்.

ஈசாக்கின் வரம் ஈக்குவல் டு ”ஞானப்பழம் மாம்பழம்”

ஈசாக் ஈக்வல்ஸ் டு சிவன்.

யாக்கோபு வேட்டைக்கு போகாமல் மந்தைஆட்டை கொண்டுவருவது ஈக்குவல்ஸ் டு பிள்ளையார் அம்மையப்பனே உலகம் என்று சுற்றி பழத்தை பெறுவது.

சும்மா சுவாரஸ்யத்துக்கு ஈக்குவேட் செய்த்தேன்... நல்லாத்தான் இருக்குவு...

No comments:

Post a Comment