Wednesday 12 December 2012

கடலைமிட்டாயும் ஒன்பாத்ரூமும்

ரொம்ப அவசரமா ஒன் பாத்ரூம் வந்துச்சி.

கொஞ்சம் வேலை இருந்ததால அத முடிச்சிட்டு போகலாம்ன்னு வேலையை செய்து கொண்டிருந்தேன். 

அவசரம் அதிகமாகவே சட்டென்று எழுந்து ஒட்டமும் நடையுமாய் போனேன்.

வழியில் ஒருவர் கையை பிடித்து ஒரு துண்டு கடலை மிட்டாயை கொடுத்தார்.

வாங்கமாட்டேன் என்றும் சொல்ல முடியாது.

அவர் ரொம்ப பாசக்காரர்.

அதனால் அதை வாங்கி கடித்து கொண்டே ரெஸ்ட் ரூமை நோக்கி போகிறேன்.

ரெஸ்ட் ரூமுக்குள் போவதற்குள் கடலை மிட்டாய காலியாகி விடும் என்ற மனக்கணக்குதான்.

ஆனால் பாருங்கள் நல்ல தரமான கடலைமிட்டாய் போலும்.

வேகமாக கடித்தும் காலியாகவில்லை.

கடைசி துண்டை வாயில் போட்டு மென்று தின்னும் போது ரெஸ்ட் ரூம் கதவை அடைந்து விட்டேன்.

இப்போது வாயில் போட்ட துண்டை மென்று தின்று கொண்டே சிறுநீர் கழிக்க முடியாது.

அது அசிங்கம் அருவெருப்பு.

அதனால் கதவின் பக்கதிலேயே இருந்து மென்று கொண்டு இருந்தேன்.

நண்பன் வெளியே வந்தான் “மச்சி என்னடா இப்படி ரெஸ்ட் ரும்ல இருந்து திங்கிற “ என்று நக்கலினான்.

No comments:

Post a Comment