Wednesday 12 December 2012

இங்கிலாந்தில் குழந்தை தொழிலாளர்கள்

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்புரட்சி இங்கிலாந்தில் ஆரம்பிக்கிறது.

உற்பத்தி செய்வது என்னும் கலையை மனிதன் கண்டுபிடிக்கிறான். 

பணமுடையவர்கள் உழைப்பை உறிஞ்சுகிறார்கள்.

குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகின்றனர்.

இங்கிலாந்து அரசு குழந்தை தொழிலாளர் அமைப்பு பற்றி விசாரிக்க பார்லிமெண்டரி கமிக்ஷனை அமைக்கிறது. 

சுரங்கத்தில் வேலை பார்க்கும் சிறுவர் சிறுமியர்களை விசாரிக்கிறது.

ஆண்டு 1833.

அதில் ஒரு குழந்தையின் பதில்கள் இது.

இதில் குழந்தை என்றுதான் தெரிகிறது.

அது ஆணா பெண்ணா என்று சொல்லப்படவில்லை.

பேட்டியை எடுத்தவர் பெயர் எலன் ஹூட்டன்.

மொழிபெயர்த்திருக்கிறேன் முடிந்தவரை.

உன் வயதென்ன?
ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி வந்தால் பத்து வயதென்று நினைக்கிறேன்.

நீ எக்கள்ஸ் பேக்டரியில் (விகன் நகரம்) வேலைக்கு சேரும் போது வயதென்ன?
எட்டு வயது முடியவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக அங்கு வேலை செய்தேன்.

எக்கள்ஸ் பேக்டரியில் உன்னை யாராவது அடித்தார்களா?திட்டினார்களா?
ஆம்.

யார் உன்னை அப்படி திட்டினது? அடித்தது.
வில்லியம் சுவாண்டன்.

எதற்காக அப்படி செய்தார்?
வேலை செய்ய முடியாமல் சோர்ந்து போகும் போது.

எப்போதெல்லாம் உன்னை அடிப்பார்?
குறைந்தது வாரத்திற்கு இரண்டுமுறை.

எதை வைத்து அடிப்பார்?
அவர் கைகளினால்.

அவர் உன்ன ரொம்ப காயப்படுத்தினாரா?
இல்லை. ஆனால் தலையில் குட்டுவார். தலைதான் வீங்கி விட்டது.

வில்லியம் சுவாண்டன் உன்மேல் எதாவது கணமான பொருளை கட்டி போடுவாரா?
ஆம் என் மேல் கட்டி போடுவார்.

எதனால் கட்டி போடுவார்?
கயிற்றினால்.கயிற்றை எடுத்து என் கழுத்தில் சுற்றி, அப்படியே என் தோள்களையும் என் வயிற்றையும் சுற்றி அதை கட்டிவிடுவார்.

எதை கட்டுவார்? அது எவ்வளவு கணம் இருக்கும்?
கணம் எனக்கு தெரியாது. ஆனால் பெரிய இரும்பு கட்டிகள். இன்னும் இரண்டு இரும்புகட்டிகளை சேர்த்து கூட கட்டுவார் என் மீது.

முயற்சி செய் அந்த இரும்பு கட்டிகள் எவ்வளவு பெரிது?
இதோ நீங்கள் கையில் வைத்திருக்கு பெரிய புத்தகம் அளவிற்கு ( லார்ட்ஸ் ரிப்போர்ட் 1818 என்ற புத்தகம்)

அது கட்டியாய் இருக்குமா?
ஆம்.ரொம்ப தடிமனாய் இருக்கும்.

எந்த சமயத்தில் அப்படி கட்டி போடுவார்?
காலை உணவிற்கு அப்புறம்.

எவ்வளவு நேரம்?
அரைமணி நேரம் சராசரியாக.

நீ அப்படி கட்டி போட்டால் என்ன செய்வாய்?
அந்த கட்டிகளை தூக்கி கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாய் அலைவேன்.

எதற்காக அப்படி கணமான பொருளை தூக்கி அலைகிறாய்?
நான் அப்படி நடக்க வற்புறுத்த படுவேன்.(வில்லியம் சுவாண்டன் வற்புறுத்துவார்)

உன்னை மாதிரி மற்ற குழந்தைகளையும் இவர்கள் இப்படி செய்வதை பார்த்திருக்கிறாயா?
ஆம்.

மற்ற குழந்தைகள் மேலும் கணபொருட்களை கட்டி போடுவார்களா?
ஆம்.சிலருக்கு கால்களில் கூட கட்டி போடுவார்கள் இரும்பு கட்டிகளை.

ஒன்றிற்கும் மேலான இரும்பு கட்டிகளையா?
ஆம பல கட்டிகளை.

எவ்வளவு நேரம் மற்ற குழந்தைகள் அதை தூக்கி நடப்பார்கள்?
ஒரு மணி நேரம்.

நான் கேட்கிற கேள்விக்கு சரியா பதில் சொல்லு? பொய் சொல்லாதே! நீ என்ன செய்தாய்? என்ன நடந்தது?
நான் பேக்டிரியை விட்டு ஒடிவிட்டேன். ஏனென்றால் அவர் என்னை கடுமையாக அடித்தார்.தாங்கமுடியவில்லை.

நீ எதையாவது திருடினாயா?
இல்லை.திருட வில்லை.

இதை நீ உன் அம்மாவிடம் சொன்னாயா?
சொன்னேன்.அம்மா எதுவும் பதில் சொல்லவில்லை.

அப்பாவிடம் சொன்னாயா?
எனக்கு அப்பா இல்லை.

The Mammoth book of How it happened in Britain.

Edited by Jon E.Lewis.

No comments:

Post a Comment