Wednesday 12 December 2012

உடைத்த கடலை மேஜிக்...

ஆறு உடைத்த கடலைகளை எடுத்து கொள்ளுங்கள். (நினைவில் கொள்க உருண்டையை இரண்டாய் வெட்டின வடிவத்தில் இருக்கும்)

உங்கள் முன்னாடி இருப்பவர் இளித்த வாயரா என்று என்பதை கன்பர்ம் செய்த்து கொள்ளுங்கள்.

இப்போது ஆரம்பியுங்கள் உங்கள் மேஜிக்கை.

முதலில் ஒரு கடலையை வாயில் இரண்டாய் கடித்து அதில் ஒரு பாதியை வாய் உள்ளே வைத்து இன்னொரு பாதியை வெளியே வையுங்கள். 

வாய் உள்ளே இருக்கும் பொரிகடலையை சாப்பிடுவது மாதிரி பாவலா
 காட்டுங்கள்.

ஆனா சாப்பிடக்கூடாது ( அங்க வெச்சிருகேன் டெக்னிக்).

அடுத்த முழு கடலையை வாயில் போட்டு கடிப்பது மாதிரி பாவ்லா காட்டி முதல் கடலையின் பாதியை வெளியே எடுங்கள். ( அதுதான் இரண்டாவது கடலையின் பாதி என்று நம்ப வையுங்கள்)

இப்போது இரண்டாவது கடலை முழுதாய் உங்கள் வாயினுள் இருக்கிறது.

அடுத்து மூன்றாவது கடலையை கடிக்க வேண்டும்.

நான்காவது கடலையை கடிக்க கூடாது.( மூன்றாவது கடலையின் பாதியை எடுத்து நம்ப வைக்க வேண்டும்)

இப்படியே ஐந்தாவதுக்கும் ஆறாவதுக்கும் செய்யுங்கள்.

இப்போ சொல்லுங்க “ பாருடா பனங்கா மண்டையா! ஆறு கடலையும் உன் முன்னாலத்தான பாதி பாதியா கடிச்சேன். ஆனா இப்ப பாரு அப்படின்னு...

ஜங் மங் என்று மந்திரம் போடு வாயிலுள்ள மூன்று முழுகடலைகளையும் எடுத்து காட்டுங்கள்.

லைஃப்ஃபை என்ஜாய் பண்ணுங்கள்.

ஒடுங்க இப்பவே பொரிகடலை என்ற பொட்னலுபப்பு என்ற உடைத்த கடலையை எடுத்து பயிற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment