Friday 7 September 2012

ஆனந்தாடி அப்படி சொன்னான்

நேற்று என் எதிர்த்தாற் போல அமர்ந்திருந்த அழகு பெண், முகத்தை உம்மென்று வைத்திருந்தார்.

வயது இருபத்தி மூன்று இருக்கலாம்.

இறுக்கமென்றால் அப்படி ஒரு இறுக்கம்.

போன் வந்தது.பேசி சிரித்தாள். “ ஆனந்தாடி அப்படி சொன்னான். ஆனந்தா அப்படி சொன்னான். நம்ம ஆனந்தாடி அப்படி சொன்னான்.எவ்ளோ கொழுப்பு பாரு அவனுக்கு” என்று உரக்க கலகலவென்று சிரித்தாள்.

அந்த முகம் தெரியாத “ஆனந்த்” மேல செம கடுப்பு வந்தது.

No comments:

Post a Comment