Friday 7 September 2012

காமம் என்றால் இதுவா ?

அன்று எங்கள் ஏரியாவில் கட்சி மீட்டிங் முன்னர் போடும் டான்ஸ் போட்டு கொண்டிருந்தார்கள். 

நான் ஆர்வத்தோடு பார்த்து கொண்டிருந்தேன்.”புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க” பாட்டுக்கு ஆணும் பெண்ணும் ஆடினார்கள். 

பெண் பாவாடை சட்டை போட்டு உள்ளே ஒரு லெகின்ஸ் போட்டிருந்தாள். 

சுத்தி சுத்தி ஆடினாள். 

ஒவ்வொருமுறை அவள் பாவாடை சுத்தும் போதும், அவள் உள்ளே போட்டிருக்கும் ’லெக் இன்ஸ்’ தெரிந்தது.

உண்மையில் பார்த்தால் அதில் எந்த ஆபாசமும் கவர்ச்சியும் இல்லை.

ஆனாலும் ஆண்கள் கூட்டம்( என்னையும் சேர்த்துதான்) பாவாடை சுத்தும் போது ஆர்வத்தோடு பார்க்கிறது.

இதுதான் ஆண்களின் மன உலக தத்துவம். இதை எல்லா பெண்களும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

அது பற்றி சிந்தித்து கொண்டே இருந்தேன்.

ஆண் இனத்தின் மீதே ஒரு வாஞ்சை வந்தது. ”பாவம்டா நீங்கள்” இது மாதிரி இயற்கை உங்களை படைத்து விட்டதே என்று.

எங்கு போனாலும் இதனால் கெட்ட பெயர் கிடைத்து விடுகிறதே உங்களுக்கு.

மரப்பசு நாவலில் வீட்டு வேலை செய்யும் கறுப்பு நிற கட்டுமஸ்தான பெண்ணை பார்க்கும் போது ‘கோபாலிக்கு’( கதை நாயகன்) உதறல் எடுக்கும்.

அவள் குறுக்கும் நெடுக்குமாய் அலையும் போது வேர்த்து கொட்டும். பதறுவார்.

அந்த வேலைக்காரி அம்மணி ( கதை நாயகி) யிடம் சொல்வாள்” அம்மா. நான் ஒழுக்கமா இருந்துப்பேன். ஆனா ஐயா உதறும் போது ரொம்ப பாவமா இருக்குமா. என்னைக்காவது பாவப்பட்டு கொடுத்திருவனோன்னு பயமா இருக்கும்மா “ என்பாள்.

ஜானகிராமன் தெய்வப்பிறவிதான்.

எப்படி எழுதியிருக்கிறார் ஆணையும் பெண்ணையும்.

”புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க” பாட்டு முடிந்தது.
அடுத்தது என்ன பாட்டு என்று எல்லோரும் ஆர்வமாய் இருக்கிறோம்.

மனைவிடம் மேட்டரை சொல்லி வர நேரமாகும் என்று சொல்லி அடுத்த பாட்டுக்கு காத்திருக்கிறேன்.

கூட்டத்தோடு சேர்ந்து காத்திருக்கிறோம்.

அடுத்து எம்.ஜி.ஆர் மட்டும்தான் வந்தார். “நான் ஆணைஇட்டால அது நடந்து விட்டால்” என்று.

வெறும் ஆம்பிளை மட்டும் வந்தால் எப்படி.

கூட்டம் கலைந்து டீ குடிக்க சென்றது, நான் கடுப்பில் வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.

ஆனால் கூட்டம் டீ குடித்து விட்டு கண்டிப்பா அடுத்த ஜோடி பாட்டுக்கு திரும்ப வரும்.

அவர்களுடைய ஒரே வேண்டுதல் அடுத்த பாட்டில் ஆடும் பெண்ணாவது பாவாடையை இன்னும் Higher Elevation இல் பறக்க விட வேண்டும்.

கொஞ்சம் இடுப்பும் தெரிந்தால் அது மருந்தீஸ்வரர் அருள்தான். :))

No comments:

Post a Comment