Monday 24 September 2012

எனக்கு தெரிந்த அறிவியல் - 1

பூமி தோண்றும் போது என்ன இருந்துச்சு ?

கல்லும் மண்ணும் தண்ணியும் இருந்துச்சு.

அந்த கல்லும் மண்ணும் தண்ணியும் எங்க இருந்து வந்துச்சி?

அது அப்படியே இருந்துச்சிப்பா.

சரி.விடு.உலகம் பூரா உயிரில்லாத Inorganic பொருளா இருந்துச்சி இல்லையா?

ஆமா! உயிரில்லாமத்தான் இருந்துச்சி.

அப்போ எப்படி உயிரில்லாத பொருட்களில் இருந்து , உயிருள்ள உயிரினங்கள் தோண்றிச்சி. மாட்டுனியா மச்சி பதில் சொல்லு?

அதுக்கு ஒரு தியரி இருக்கு அது பேரு Urey Miller தியரி.

அடப்பாவி நீ என்ன இந்த போடு போடுற. மேல சொல்லு பார்ப்போம்.

அந்த மில்லர் என்ன செய்ஞ்சி புட்டாருன்னா, ஆதிகால பூமில Inorganic பொருட்கள் எல்லாம் எப்படி இருந்துச்சோ, அதே மாதிரியான ஒரு செட்டப்பை உருவாக்கினாரு அவரு லேபாரட்டரில.

எப்படி உருவாக்கினார்?

அது மாதிரியே கடல் தண்ணிய எடுத்துகிட்டார், அத அப்போ இருந்த Pressure Temperature க்கு கொண்டு போனார். அதுல மின்னல்ல எவ்வளவு சக்தி வாய்ந்த கரண்ட் இருக்குமோ அத பாய்ச்சினார். அப்புறம் அதனால அவருக்கு கிடைத்த பொருள ஆராய்ச்சி பண்ணினார்.

என்ன தெரிஞ்சது அந்த ஆராய்ச்சில?

அது ஒரு ஆச்சர்யம் பாரு மச்சி, உயிரில்லாத பொருள்கள் எல்லாம் சேர்ந்து ,உயிருள்ள பொருட்களின் முக்கியமான மூலப்பொருளான அமினோ ஆசிட்கள (Amino acid) கொடுத்துச்சாம்.

ஒகோ இஸ் இட். ஃபைனாலா என்னதான் சொல்றார் urey miller ?

பூமி தோண்றுன புதுசுல கடல் தண்ணியில மின்னல்கள் அதிகமா பாய்ஞ்சது மற்றும் அந்த சூழ்நிலையில உயிரில்லாத பொருள்களில் இருந்து முதலில் அமினோ ஆசிட்கள் தோண்றின. அமினோ ஆசிட்கள் ஒரு Organic பொருள். அதிலிருந்து முதலில் ஒரு செல் உருவாகியது. அந்த ஒரு செல்லிருந்து நாமெல்லோரும் உருவானோம்.

இப்படி உயிரில்லாத பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் உள்ள ஒற்றுமைய கண்டுபிடிச்ச சோதனை பேரு என்ன மச்சி ? இன்னொருதடவ சொல்லு ?

UREY MILLER EXPERIMENT. கூகிள் செய்ஞ்சு பாருடா. இது எட்டாங்கிளாஸ் சயின்ஸ்லே வரும்டா.

No comments:

Post a Comment