Saturday 22 November 2014

இலக்கியம் தாண்டுதல்...

நிச்சயமாக எழுத்தாளர்களில் படைப்புகளில் அடுக்குகள் உண்டுதான்.
ராஜேஷ்குமார், அனுராத ரமணன்,பாலகுமாரன், தி.ஜா, சு.ரா, பிரமிள் என்பது மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடுக்கு இருக்கும்.
இதில் சில எழுத்தாளர்களை கடந்து செல்லலாம், ஆனால் தாண்டக் கூடாது.அது பேரிழப்பை கொடுத்து விடும் (இலக்கியத் தன்மை அளவில்).
ராமாயணத்தையும்,மகாபாரத்தையும் ஒருவன் கடந்து போகலாம், அதாவது வாசித்து நன்கு தெரிந்து செரித்து பின் கடந்து விடலாம். ஆனால் வாசிக்காமலேயே தாண்டுவது என்பது வாசகனுக்குத்தான் இழப்பு.
அந்த இரு இதிகாசத்தைத்தில் இருக்கும் இலக்கியத் தன்மையால் அதை அப்படி தாண்டமுடியாதது என்கிறோம்.
ஆனால் கவனியுங்கள் கடந்துவிடலாம்.அதையே வாசித்துக் கிடக்கத் தேவையில்லை.
பொன்னியின் செல்வனும்,சிவகாமியின் சபதுமும் அப்படித்தான். மொழிநடையும் கதை சொல்லும் விதமும் அற்புதமானவை.அதை நிச்சயமாக தாண்டக் கூடாது.ஆனால் வாசித்துக் கடந்து சென்று விடலாம்.
இப்போது ஆனந்தவிகடனில் ப்ரியாதம்பி பல்வேறு பெண்களின் நிலையை தெளிவுற எழுதுவதாக நினைக்கிறோம்.
ஆனால் பாலகுமாரன் இதையெல்லாம் எப்போதோ அழகாக எழுதி விட்டார்.
”கைவீசம்மா கைவீசு” நாவலில் வரும் ஆசிரியை கிளைமேக்ஸில் பேசும் வசனத்தை விடவா ஒரு பெண்ணியக் குரலை ஆவேசமாக பேச முடியும்.நிச்சயமாக பாலகுமாரனைக் கடக்கலாம்.ஆனால் தாண்டக்கூடாது.
சில இலக்கியங்களை கடக்கலாம். தாண்டக் கூடாது....

No comments:

Post a Comment