Monday 26 January 2015

தேவடியாப் பையன்

”தேவடியாப் பையன்” என்று சொன்னால் கோபப்படாத பக்குவத்தை நம் சமுதாயம் அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.(இருக்கிறோம்)
அம்மா பலருடன் உறவு கொண்டால் பிள்ளை ஏன் அவமானப்பட வேண்டும்.குழந்தைகள் அதனால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
ஏதோ ஒரு ஆணின் ஆரோக்கிய புரதம் அவனுக்கு அடையாளம் கொடுக்கிறது.
அவன் ஐம்புலன்களோடு பிறக்கிறான்.
அடுத்தவனை தொந்தரவு செய்யாமல் அவனுக்குத் தெரிந்த திறமையில்லாத அல்லது திறனான வேலையை செய்து பிழைத்து வாழ்ந்து முடிக்கிறான்.
ஒன்றும் ஒன்றும் மட்டும் பொருந்திய ஒன்றில் பிறந்தவர்கள் உயர்ந்தவர்கள் என்றும்,
ஒன்றும் பலவும் பொருந்திய ஒன்றில் பிறந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் சொல்வது,
மதவெறி, ஜாதிவெறிக்கு சமமாக தெரிகிறது எனக்கு.

No comments:

Post a Comment