Monday 26 January 2015

தேவநேய பாவணர் நூலகம்

அன்று அண்ணா சாலையில் இருக்கும் தேவநேய பாவணர் நூலகத்தில் இரண்டு மணி நேரம் இருந்தேன்.
அங்கே நான் வாசித்து முடித்த புத்தகம் இப்சனின் “டால் ஹவுஸ்” என்ற நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான “பொம்மை வீடு” ஆகும்.(நான் படித்தது க.நா.சுவின் மொழிபெயர்ப்பு அல்ல )
கணவனுக்காக, கணவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மனைவி சந்தர்ப்ப சூழ்நிலையில் கள்ளக்கையெழுத்து போட வேண்டிய சூழ்நிலை வந்துவிடுகிறது.
அது கணவனுக்கு தெரிந்து விடக் கூடாது என்று கவனமாயிருக்கிறாள்.ஆனால் எதிரி மூலம் கணவனுக்கு விசயம் தெரிந்து விடுகிறது. கணவன் மனைவியை ஏமாற்றுக்காரி என்று குற்றஞ்சாட்டி, இனிமேல், ஊருக்காக தம்பதிகள் மாதிரி நடிக்கலாம் ஆனால் உண்மையில் அப்படியில்லை என்று வெறுப்பை உமிழ்கிறான்.
எதிரி மனம் மாறி அந்த கள்ளக் கையெழுத்திட்ட கடன் பத்திரத்தை கொடுக்கும் போது, கணவன் அதை வாங்கி எரித்து விட்டு மனைவியைப் பார்த்து “ இனிப் பிரச்சனையில்லை. நாம் அன்பாகவே இருக்கலாம்” என்கிறான்.
ஆனால் மனைவி அதை மறுத்து இனிமேல் நாம் ஒன்றாய் வாழ்வது சரிபடாது என்று வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
பாரதிராஜாவின் புதுமைபெண் சினிமா மாதிரியே இப்சன் 1879 யில் ஏன் தான் எழுதி வைத்திருக்கிறாரோ என்று சலித்துக் கொண்டேன். smile emoticon
நான் சொல்லவந்ததை விட்டு கதைச்சுருக்கத்தை சொல்கிறேன். தேவநேய பாவணர் நூலகத்தில் இரண்டு மணி நேரம் இருந்து படிக்கமுடியவில்லை.அவ்வளவு எரிச்சலான அனுபவமாக இருந்தது.
நூலகம் என்பது தெரியாமல் அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.நான் படித்துக் கொண்டிருக்கிறேன். என் பின்னே நின்று இரண்டு இளைஞர்கள் கூலாக மச்சி மாமா என்று பேசினார்கள்.
உட்கார்ந்து படிக்க சரியான வசதியில்லை. மொத்தமே நாற்பது சேர்கள்தான் இருக்கின்றன.
நாம் படிக்கும் இடத்தின் பக்கத்திலேயே மலை மலையாக புத்தக்கட்டுகள்.அவற்றை ஒவ்வொரு இடத்துக்கும் கொண்டு செல்லும் போது ஏற்படும் ஒசை.
அந்தக் கட்டிடத்தின் தூசியும் தும்பும் தரையும். எனக்கென்னவோ பெரிய கோடவுனில் இருந்து படித்த உணர்வு. அல்லது மவுண்ட் ரோடு பிளாட்பாரத்திலேயே இருந்து படித்த உணர்வு.
நாட்டின் மாபெரும் நகரமாம் சென்னையின் இதயத்தில் இருக்கும் பிரபல நூலகத்தின் நிலைமைய்ப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது.சகிக்க முடியல.
இதையெல்லாம் யார் எப்போது மாற்றுவார்கள் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment