Monday 26 January 2015

பொய்சொல்லிகள்...

நேரடியாக ஒருவிசயம் பார்த்திருப்போம்.அதை இன்னொருவர் இட்டுக்கட்டி பொய் சொல்லும் போது நமக்கு தாங்காது.
அது மாதிரி கழிந்து இரண்டு நாட்களாக நான் மன துன்பப்படும் விசயம் என்னவென்றால் மனுஷ்யபுத்திரன் சொன்ன பொய்யும் அதற்கு மற்றவர்கள் அடிக்கும் ஜால்ராவும்தான்.
நெல்சன் சேவியர் சாருவிடம் நீங்கள் ஏன் திமுகவை விமர்சிக்கிறீர்கள் அதிமுகவை விமர்சிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்கிறார்.
சாரு அதற்கு நல்லதோ கெட்டதோ குறிப்பிட்டு பதில் சொல்கிறார்.ஆனால் மனுஷ்யபுத்திரன் தன் ஃபேஸ்புக் பதிவில் சாரு பதிலே சொல்லவில்லை என்று பொய் பரப்புகிறார்.
அதற்கு 400 லைக்ஸ் விழுந்திருக்கிறது.
அதற்கு கிழே என்ன நடந்தது என்றே தெரியாமல் எம். எம் அப்துல்லா போன்ற திமுக அடிவருடிகள் சொறிந்து கொடுக்கிறார்கள்.
அதை விடுங்கள். இந்த விழாவுக்கு எனக்கு தெரிந்து கலந்து கொண்டவர்கள் கே.என் சிவராமன், யுவகிருஷ்ணா, அதிஷா, ஜோவ்ராம் சுந்தர்,நெல்சன் சேவியர் போன்றவர்கள்.இவர்களில் யாராவது மனுஷ்ய புத்திரனின் சுவரில் “இல்லையே சாரு பதில் சொன்னாரே” என்று எழுதலாம்.
ஆனால் எழுதவில்லை.
இப்போது என்ன ஆகிறது மனுஷ்ய புத்திரன் சொல்வது சரியான தகவல் மாதிரி அது ஒரு பதிவாக பதிவாகிறது அல்லவா? இது என்ன நியாயம்.
இதை விடுங்கள் நான் கொஞ்சம் நேர்மையானவாரக மதிக்கும் பதிவர்களில் ஒருவர் சாம்நாதன். அவர் மனுஷ்யபுத்திரனின் பதிவைப் பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை. அவரும் ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இது ஒரு மேட்டரா இதை எதிர்த்தால்தான் எல்லாம் நல்லதாகிவிடுமா என்று கேட்கலாம். அப்படியில்லை. பச்சையாக புளுகி வைக்கிறார் மனுஷ்யபுத்திரன்.
அதை அப்படியில்லை என்று சொல்வதற்கு இந்த முதுகெலுமில்லாத யுகிகிருஷ்ணாவுக்கும்,கே.என் சிவராமனுக்கும்,அதிஷாவுக்கு தைரியமில்லையே. இது என்ன மாண்பு என்று தெரியவில்லை.
எங்கள் கம்பெனிகளில் ஒருவனுக்கு அதிகம் இன்கிரீமெண்டோ அல்லது புரமோசனோ கிடைத்தால் இளைஞர்கள் கேலிக்கு “மச்சி நீ மேனேஜர் டேபிளுக்கு அடியில டெய்லி போய்ட்டு வர்றியா” என்று கேட்பார்கள் ( நான் ஒரு அப்பாவி இப்போதுவரைக்கும் அதற்கு எனக்கு அர்த்தமே தெரியாது.
இப்போது அதே கேள்வியை கே.என் சிவராமனுக்கும்,யுவகிருஷ்னாவுக்கும்,அதிஷாவுக்கும், ஜோவ்ராம் சுந்தருக்கும் புரியும்படியாக, நான் கேட்கிறேன்.
“ஏங்க நீங்கல்லாம் மனுஷ்யபுத்திரன் டேபிளுக்குள்ள போயிட்டு வர்ற ஆட்களா”
அட மானமுள்ள மக்காஸ்களா...

No comments:

Post a Comment