Thursday 16 April 2015

ஏப்ரல் மாதக் காலச்சுவடில் வந்த மாமல்லன் சிறுகதை

விமலாதித்த மாமல்லன் எழுதி ஏப்ரல் மாதம் காலச்சுவடில் வந்த ‘கோபுரம்’ சிறுகதை வாசித்தேன்.
செய்தி கொடுத்த துக்கத்திலும் பதட்டத்திலும்,
கெட்ட செய்தி சொல்லும் தூதுவனை வெட்டிக்காயப்படுத்தும் அரசனாய், பொதுமக்கள் இருப்பதை காட்டுவது போல கதையைத் தொடங்கி மற்றொரு உள்ளடுக்கையும் வைத்து,
வரலாறு பற்றிய மென்மையான பகடியை முடிவில் வைக்கிறார் என்பதாக நான் புரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு ஊரின் ஸ்தல வரலாறை ஒட்டிய பழக்க வழக்கங்கள்,மற்றும் கலைக்காட்சிகள் பின்னால் அசட்டுத்தனமாக கூட ஏதாவது காரணம் இருக்கவும் கூடும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
மாமல்லனின் மொழியை பல இடங்களில் ரசித்தேன்.உதாரணமாக
/கற்றுக்குட்டி புகைப்படக்காரனையும் கலைஞனையும் ஒருசேரக் கவரக்கூடிய வயோதிக வசீகரத்தை அவனுக்கு அளித்திருந்தன/
/அவ்வளவு நெரிசலிலும் எவரும் நசுக்கிவிடா வண்ணம் அழுக்கடைந்த அவனது ஆடைகளே அவனுக்கு பாதுக்காப்பு அரண் அமைத்துக் கொடுத்திருந்தன/
என்பது போன்று பல வாக்கியங்களை சொல்லலாம்.
ஆனால் இந்தக் கதையை சில இடங்களில் உணர்வுப் பூர்வமாக் விவரித்திருக்கலாம்.ஆனால் கதையாசிரியர் ஏனோ அவ்விடங்களை வேக வேகமாக கடந்து செல்கிறார்.
’கதை’ என்பது செறிவாக இருக்கும் இவ்வாறானக் கதைகளை கொஞ்சம் நீட்டித்து எழுதுவதுதான் சிறந்தது என்பேன்.கதையின் இறுதிக்கட்டத்தில் எல்லாம் அசாதரண வேகம் தெரிகிறது.
ஒருவேளை நிறைய சிறுகதையாசிரிகள் அதுபோல பண்ணி பண்ணி நீட்டித்து எழுதுவது அவருக்கு சலிப்பைக் கொடுத்து,அப்படி இருக்ககூடாது என்று அவர் நினைத்திருக்கலாம்.
எனக்குப் பிடித்திருந்தது...

No comments:

Post a Comment