Thursday 16 April 2015

டேய் அண்ணன்

நேற்று கடையில் கூடையில் ஒவ்வொரு பொருளாய் எடுத்துக் கொண்டு வரும் போது,
ஒரு அண்ணன் தங்கையைப் பார்த்தேன் (முகஜாடையில்தான்)
அண்ணனுக்கு பதினெட்டு வயது இருக்கும்.தங்கைக்கு பதினைந்து வயது இருக்கும்.
பணக்கார வளர்ப்பு அவர்கள் உடையில் தெரிந்தது.
அந்தப் குட்டிப் பெண் குண்டான கன்னங்களுடன் அப்பாவியாக தெரிந்தாள்.அவ்ள் கேட்கிறாள்.
“ஹேய் நான் வெண்டக்காய் வாங்கிக்கவா”
அண்ணன் வேண்டாம் என்று தலையாட்டுகிறான்.
“இல்ல நான் வாங்குறேன். ஐ வில் மேக் சம்திங் நைஸ் ஃபார் யூ” என்கிறாள் தங்கை. அண்ணன் என்ன சொல்வது என்று முழித்து தங்கையைப் பார்க்கிறான்.
எனக்கு அந்த அண்ணன் மீது கோபம் வந்தது.
“டேய் அண்ணன்.
அண்ணன்.
தங்கச்சி ஆசையா கேக்குது.
வெண்டக்காய் வெச்சித் தந்தா தின்னுடா பயலே.எனக்கெல்லாம் இப்படிப்பட்ட தங்கச்சி இல்லாம எவ்வளவு ஏங்கியிருக்கேன் தெரியுமா?
நான் பொறந்து வளந்தது எல்லாம் காட்டுப்பூனைகளோடத்தான்.
இவ்வளவு நல்ல தங்கச்சி கிடைக்குமாடா”
என்று மனதுக்குள் திட்டி விட்டு வந்தேன்.

No comments:

Post a Comment