Tuesday 2 December 2014

Dig for Victory

இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனில் உணவுத் தட்டுப்பாடு ஆரம்பமாகிறது.

அதுவரை உணவையும் பழங்களையும் அமெரிக்கா கனடாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த பிரிட்டனுக்கு போரினால் அதை செய்ய முடியாத சூழ்நிலை.

ஜெர்மெனிகாரன் கப்பலை வரவிட மாட்டேங்குறான்.அதில்லாம போர் வீரர்களை ஏற்றிச் செல்ல உணவு கப்பலையும் பிரிட்டன் பயன்படுத்தியது.விளைவு உணத் தட்டுபாடு.

ரேசன் முறை அமுலுக்கு வருகிறது.அது மட்டும் அரசுக்கு நிலமையை சமாளிக்க போதவில்லை.

அதனால் ”வெற்றிக்காக தோண்டு” ( Dig for Victory) என்ற கோஷத்தை முன்வைக்கிறது அரசு.இந்தத் திட்டத்தின் குறிக்கோள் கிடைக்கும் எல்லா இடங்களிலும் காய்கறி மற்று உணவுச் செடிகள் பயிரிடுவது.பெண்களையும் நிறைய அளவில் விவசாயம் செய்ய வைப்பது போன்றவையாகும்.

வீட்டில் இடமில்லாதவர்களுக்கு அரசு தோட்டம் போட இடம் கொடுத்தது.எங்கெல்லாம் இடமிருக்கிறதோ அங்கெல்லாம் காய்கறித் தோட்டம் போட்டார்கள்.வீட்டுக் பக்கத்தில் கொஞ்சூண்டு இடமிருந்தாலும் அதில் இரண்டுக் கத்திரிக்காய் செடிகளை நட்டார்கள்.தரிசு நிலத்தை சிறிய அளவில் தயார் செய்து அதில் உணவு பயிரிட்டார்கள்.

நகரில் இருக்கும் பார்க்குகளில் கூட காய்கறிகளை பயிரிட்டார்கள்.
மக்கள் வீடுகளில் கோழி ஆடு முயல் போன்றவற்றை வளர்க்க உற்சாகப்படுத்தப்பட்டனர்.

காய்கறிகளை வீணாக்காமல் சாப்பிடுமாறு மக்களுக்கு யோசனை சொன்னார்களாம். காலிஃபிளவரில் இருக்கும் பச்சைத் தண்டுகளையும் இலைகளையும் சாப்பிடச் சொன்னார்கள்.அதற்கென்று தனி சமையல் குறிப்புகள் வந்தனவாம்.பட்டாணியின் தட்டையையும் வீணாக்க்காமல் சாப்பிடச்சொன்னார்களாம்.

”தோண்டு தோண்டு நாட்டின் வெற்றிக்காக தோண்டு” என்பது ஒவ்வொரு பிரிட்டன் குடிமகனின் உள்ளத்திலும் ஆழமாக பதிய, அந்த நாடு உணவுப் பஞ்சத்திலிருந்து தப்பியதாம்.

Dig for Victory எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள் கோஷம்.

பிரிட்டனின் Dig for Victory மாதிரி பிரச்சாரமாக மோடியின் ”சுத்தமாக இந்தியாவை வைத்தல்”(தனிமனித அளவிலான முயற்சி) பிரச்சாரத்தையும் நாம் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ளலாம்.

நம்மால் முடிந்த அளவுக்கு குப்பையில்லாமல் சுத்தமாக வைக்க முயற்சி செய்யலாம்.


No comments:

Post a Comment