Tuesday 2 December 2014

மனுஷா மனுஷா - 36 வருடமாக நிகழ்த்தப்படும் நாடகம்...

ஞானி நடத்தும் பரீக்‌ஷா நாடகக் குழுவின் நாடகங்களைப் பார்த்தேன்.
தன் 24 வயதில் இதைத் தொடங்கி 36 வருடங்களாக நடத்தி வருவதாக ஞானி சொன்னபோது மலைப்பாக இருந்தது.
அம்பையின் கதையொன்றின் பகுதியும்,”மனுஷா மனுஷாவும்” நாடகமாக காட்டினார்கள்.
”மனுஷா மனுஷா” வில் உள்ள எளிய வசனங்களும், பகடிகளும் என்னை ஈர்த்தன.அதில் வியாபாரியாக நடித்த தமிழரசி என்றப் பெண் மிக அருமையாக நடித்திருந்தார்.
விஷ்ணுபுரம் சரவணனையும், அவர் தோழி எல்.கே.ஜி படிக்கும் சாதனாவையும் பார்த்தேன்.சாதனாவின் குறும்பையும் குழந்தைதனத்தையும் ரசித்தேன்.
சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த போது “கமர்கட்” பாக்கெட் ஒன்றைக் கொடுத்து “விஜய் உங்க பொண்ணுக்கு கொடுங்க” என்றார்.
ஐந்து கமர்கட்டுகள் ஒரு பாக்கெட்டுகள் இருந்தன.எனக்கு அதில் ஒன்றை அப்போதே சாப்பிட வேண்டும் போல இருந்தது.
”இவரு வேற கொழந்தைக்கு குடுங்கன்னு சொல்லிட்டாரு இனிமே எங்க பாக்கெட்ட உடைக்கிறது.ஆட்டோவுல ரிட்டர்ன் போகும் போது உடச்சிரவேண்டியதுதான்” என்று நினைத்து ஆர்வத்தை அடக்கிக் கொண்டேன்.
என் மனவோட்டத்தை சரவணன் புரிந்து கொண்டிருப்பார் போலும், தன் பாக்கெட்டில் இருந்து ஒரு கமர்கட்டை எனக்கு எடுத்துக் கொடுத்தார்.
பிரித்து வாயில் போட்டேன்.கடிக்கக் கூடிய கடினமாய் சுவையாகவே இருந்தது.அதை சவைத்தபடியே நாடகத்தைப் பார்த்தேன்.
இன்று காலை டீ, காலை உணவு, வீடு பெருக்குதல்,பாத்திரம் கழுவுதல், மதிய உணவு,மாலை டீ, மாலை வீட்டுக்கு வெளியே பெருக்கி ஸ்டார் கோலம் போட்டது வரை நானே செய்தேன் ( அத வெளிய சொல்றதுல ஒரு சந்தோசம்  ) இதையெல்லாம் செய்து முடிக்கும் போது மணி ஐந்தே கால்.
நியாயப்படி நான் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.
நான் உடனே ஆட்டோ எடுத்துக் கொண்டு அரக்கப்பரக்க,ஞானியின் நாடகம் பார்க்கப் போனேன் என்றால் என்ன அர்த்தம்.
கலை மேல இருக்கிற லவ்ங்க 

No comments:

Post a Comment