Monday 15 December 2014

அம்பேத்கரின் வாசகம்...

ஒரு விசயம் சரியென்று உங்களுக்குப் படுகிறது.
அதை சமுதாயத்தில் நிறைவேற்றினால் மக்களுக்கு சமத்துவம் கிடைக்கும், நீதி கிடைக்கும், சுபிட்சம் கிடைக்கும் என்று தெளிவாக உணர்கிறீர்கள்.
ஆனால் அதை நீங்கள் நினைத்த அளவில் நிறைவேற்ற முடியவில்லை.
நிறைவேறுகிறது ஆனால் நினைத்த அளவுக்கு நுண்ணியமாக கூர்மையாக நிறைவேற்ற முடியவில்லை.
Ideal ஆன விசயத்தை அனைவருக்கும் பிடித்தமான ஒத்துக்கொள்ளத் தக்க விசயமாக ஆக்கும் போது இழப்புகள் வரும்.அந்த இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் முடிந்த அளவில் நல்லதை நிறைவேற்றத் துடிப்பதுதான் புத்திசாலித்தனம்.
இதற்கு அம்பேத்கார் ஒரு உதாரணம் சொல்கிறார்.
“எப்படி அம்மாவும் மகனும் திருமணம் செய்து கொண்டால் குற்றம் என்று சட்டமிருக்கிறதோ,
எப்படி அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டால் குற்றம் என்று சட்டமிருக்கிறதோ,
எப்படி அப்பாவும் மகளும் திருமணம் செய்து கொண்டால் குற்றம் என்று சட்டமிருக்கிறதோ,
அப்படியே ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொள்வதும் குற்றம் என்றொரு சட்டம் இயற்றலாம்தான்.ஆனால் காலங்காலமாக ஜாதிவெறியில் அவர்களை அறியாமல் திளைத்திருக்கும் நம் மக்களின் தனிநபர் உரிமையில் அதிகம் தலையிடுவது மாதிரி ஆகிவிடும்.
ஆகையால் அந்தச் சட்டத்தை கொண்டுவர விரும்பவில்லை” என்கிறார்.
அதாவது நல்லது தெளிவாக தெரிகிறது .ஆனால் அந்த நல்லதை 100 பர்சண்ட் செயலாற்ற முடியவில்லை என்றால் முடிந்த வரை அட்லீஸ்ட் ஒரு 70 பர்செண்டாவது நிறைவேற்றுவதுதான் முறை.
அம்பேத்கார் இப்படி சொல்கிறார்.
“What is right i have not done
What is possible i have done"
தெளிவு...

No comments:

Post a Comment