Monday 15 December 2014

அம்பேத்கர் காந்தியிடம் கேட்ட கேள்வி...

காந்தி ஹரிஜன சேவாக் சங்கம் ஆரம்பிக்கிறார்.
காந்தியின் கொள்கைப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்காக தாழ்த்தப்பட்டவர்கள் போராடத் தேவையில்லை.அவர்களுக்காக மற்ற ஜாதியினர்தான் போராட வேண்டும்.
ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தீங்கிழைத்து வைத்திருப்பதின் பொறுப்பை மற்ற ஜாதினரே ஏற்று அதைக் களைய முயற்சி செய்ய வேண்டும்.
இப்படி ஒரு விநோதமான கொள்கையை அறிவிக்கிறார்.
ஆரம்பகட்டத்தில் ஹரிஜன சேவாக் சங்கத்தில், இணைந்து பணியாற்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆசைப்படும் போது இந்த விநோதக் கொள்கையைக் காட்டி மறுக்கிறார் காந்தி. ( நீ சுமமா இருல உனக்கு உரிமை நாங்க வாங்கிதருவோம்)
இதற்கு அம்பேத்கார் தன்னுடைய சிறுபத்திரிக்கையில் ஒரு பதில் கேள்வி கேட்கிறார்
“ஐயா காந்தி அவர்களே! அடிமைப்படுத்தியவன் தான் சுதந்திரமும் வாங்கித் தரவேண்டும் என்றால், இந்தியர்களை அடிமைபடுத்திய ஆங்கியலேயர்களை எதிர்த்து,நாம் ஏன் போராட வேண்டும்.ஆங்கிலேயர்களிலேயே நல்லவர்கள் பலர் இருக்கிறார்களே அவர்கள் போராடுவதுதானே முறை” என்றொரு கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினார்.
ஜெயமோகன் போல காந்தி அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
வழக்கம் போல காந்தி ரசிகர்கள் காந்தியை வாழ்த்திக் கொண்டே இருந்தார்கள்.
அந்த அதீத வாழ்த்தொலியில் அம்பேத்கார் எழுப்பிய பல அர்த்தமுள்ள கேள்விகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன என்பது சோகமான உண்மை.

No comments:

Post a Comment