Saturday 22 November 2014

சாப்பாட்டுக் கடை

என்னுடைய ”கனவு ஹோட்டலில்” என்ன செய்வேன் என்றால்...
1.மதியம் சாப்பாடு, காலை இட்லி, தோசை மட்டும்தான் கிடைக்கும்.
2.இட்லி தோசையில் வெரைட்டி எல்லாம் கிடையாது.இட்லியும் சாதா தோசை மட்டும்தான்.
3.ஒவ்வொரு உணவின் செய்முறையும் விளக்கமாக ஒரு புத்தகத்தில் அச்சிட்டப்பட்டிருக்கும்.அளவு முதல் கொண்டு அதில் இருக்கும். ஐநூறு சாப்பாட்டுக்கான மீல்ஸுக்கு எவ்வளவு சாம்பார் தேவைப்படுகிறதோ, அந்த அளவு. அப்புறம் இவ்வளவு துவரம் பருப்பு. இவ்வளவு கிலோ இன்ன இன்ன காய்கறிகள் என்று அதில் தெளிவாக குறிப்பிட்டிருக்கும்.
4.உணவின் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருப்பதால், அந்த அடிப்படையில் தினமும் மீல்ஸின் விலை ஏறி இறங்கும்.ஒரே விலைதான் வேண்டும் என்று நினைப்பவர்கள் என் ரெஸ்தாரந்துக்கு வரத்தேவையில்லை.
5.ஆயிரம் இட்லி என்றால் அவ்வளவுதான்.அதற்கு மேல் ஒரு இட்லி கூட அவிக்க மாட்டேன்.
6.எக்ஸ்டிரா மாவு வந்தால் அதை அடுத்தநாள் குளிரூட்டி உபயோகிக்க மாட்டேன்.அந்த இட்லி தோசை மாவுகள் அன்றன்று அழிக்கப்படும்.அந்தத் தகவலை போர்டில் எழுதி போடு பார்வைக்கு வைப்பேன்.அதற்கான செலவு இட்லி விலையில் ஏற்றப்படும்.
7.காய்கறி விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப மாற்றிப் போடுவதில்லை.ஒரே ரெசிப்பிதான்.அந்த விலையும் விலையில் ஏறும்.
8.உணவை வீணாக்கினால் அந்த வாடிக்கையாளருக்கு ஒரு துண்டுப் பிரசுரம் கொடுப்போம்.அதில் அவருக்கு அட்வைஸ் இருக்கும் 
9.ஊறுகாய்கள் மிஞ்சியது அழிக்கப்படும்.தயிரின் தரம் பலமுறை சோதிக்கப்படும்
10.மொத்ததுல உணவோட தரம் மாறாமல் இருக்கும். விலை மாறும்.

No comments:

Post a Comment