Saturday 22 November 2014

ஃபேஸ்புக் நன்மைகள்...

ஃபேஸ்புக்கின் பெரிய அட்வாண்டேஜில் சில...
1.அழகானவர்களிடம் பழக முடிகிறது.
அதிலும் அழகான எதிர்பாலினர்.
ஃபேஸ்புக் இல்லாவிட்டால் அவர்கள் ரோட்டில் நடந்து செல்லும் போதோ, மார்க்கெட்டிலோ நட்பாக சிரிக்கக் கூட முடியாது.அவர்களுடைய அழகைப் பார்த்தே நமக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.
அதுவும் இந்தியப் பெண்கள் போன்ற ’சுருள்குணம்’ கொண்டவர்களிடம் எளிதில் பேசிவிட முடியாது.
நம் நாட்டில் பார்ட்டி போன்ற கலாச்சாரங்களும் கிடையாது. ஃபேஸ்புக்கால் மட்டுமே இந்த பழக்கம் சாத்தியமாகிறது.
2.பணக்காரர்களிடம் பழக முடிகிறது.
பெரிய பெரிய பங்களா வைத்திருப்பவர்கள், இரண்டு மூன்று கார்கள் வைத்திருப்பவர்கள், விளையாட்டு சாமான் போல இரண்டு முன்று ஸ்கூட்டிகளை வீட்டின் கொல்லைப் பக்கம் கட்டிவைத்திருப்பவர்கள்.
அமெரிக்கா அடிக்கடி சென்று வருபவர்கள்.
மூன்று கிரவுண்ட் நிலத்தில் வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்கள்,
சரவணா ஸ்டோர்ஸில் அரைக்கிலோ தங்கம் அட் எ டைம் வாங்குபவர்கள் போன்றவர்களிடம்,
என்னை போன்ற லோடு சைக்கிளை உருட்டிச் சென்று ”மூன்று ரூவாய்க்கு பச்சைமிளகாய் கொடுங்க” என்று கேட்கும் சாமான்யர்களால் பழக முடிகிறது.
அட! இவ்வளவு பணமிருந்தும் சாதரணமாத்தானே பழகுறான்கள் என்று கண்டுகொள்ள உதவி செய்த இடம் ஃபேஸ்புக்.
3.அந்தஸ்தானவர்களிடம் பழக முடிகிறது.
பெரிய அரசியல்வாதிகள், ஊடக மொதலாளிகள்,
அறிவின் உச்சத்தைக் கொண்டுள்ள, உலகில் எல்லாம் தெரிந்த வக்கீல்கள்,
தவறே செய்யாத கடவுளுக்கு அடுத்தபடியாக நாமெல்லோரும் கட்டாயம் கும்பிடும் பெரிய பெரிய டாக்டர்கள்,
போலீஸ் அதிகாரிகள்,
பெரிய பெரிய வியாபாரிகள் போன்றவர்களிடம் பேஸ்புக்கின் உதவியால் எளிதாக பழக முடிகிறது.
ஃபேஸ்புக் இல்லாவிட்டால் ஒரு வக்கீலிடமோ அல்லது டாக்டரிடமோ பேச முடியுமா? அவர்கள் பேச வந்தால் நாமே தாழ்வு மனப்பான்மையால் ஒதுங்கி விடுவோம்தானே.
4.அறிவாளிகளுடன் பேச முடிகிறது. பழக முடிகிறது.
எழுத்தாளர்கள் சமுதாயச் சிந்தனையாளர்கள் எல்லாம் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்ற எண்ணத்தை தகர்த்த இடம் ஃபேஸ்புக்.
“அட ! இவர்களும் நம்மை போல ஆட்கள்தான்” என்று எல்லொரும் தெரிந்து கொண்டு பழக ஆரம்பித்தோம் ஃபேஸ்புக்கின் உதவியால்.
பல இடங்களில் அவர்களை விட நாம் அறிவாளிகள் என்பதைக் கண்டு கொண்ட இடமும் ஃபேஸ்புக்தான்.
இப்படி ஃபேஸ்புக் உண்மையான சமத்துவத்தை நமக்கெல்லாம் காட்டி அடக்கமாக நம்மை மகிழ்விக்கிறது.
வாழ்க ஃபேஸ்புக் 

No comments:

Post a Comment