Saturday 22 November 2014

ஆண்கள் தினம்...

போன ஜெனரேசனில் ”கற்பு” என்கிற விசயத்தை வைத்து பெண்களை அடிமையாக வைத்திருந்தோம்.
இப்போது அது செல்லுபடியாக வில்லை.
இந்த ஜெனரேசனுக்கு “தாய்மை” என்ற விசயம் இருக்கிறது.அதை வைத்து பெண்களை அடிமைகளாக தந்திரமாக வைத்திருக்கிறோம்.
ஆனால் அதையும் கடந்து விடுவார்கள் போலிருக்கிறதே.
நம் அடுத்த ஜெனரேசன் ஆண்கள் எதை வைத்து, எந்த போலி கற்பிதத்தை வைத்து பெண்களை அடிமையாக்கி வைத்திருப்பார்கள்.?
யோசித்தீர்களா ?
ஆண்களாகிய நாம் இந்த “ஆண்கள் தினத்தில்” இது பற்றி யோசித்து எதாவது முடிவெடுத்தே ஆகவேண்டும்.
அடுத்த ஜெனரேசன் கே.ஜி பாடத்திலும் Father is the head of the family என்றுதான் குழந்தைகள் வாசிக்க வேண்டும்...
வாருங்கள் ! ஒன்று கூடுவோம் ஆண்களே !

No comments:

Post a Comment