Wednesday 26 June 2013

சாரு போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் அண்ணாவை பற்றி சொல்லும் அவதூறு உண்மையா ?

”அண்ணாவின் எழுத்துக்களை படிப்பவன் எப்படியிருப்பான்” சாரு நக்கலாக எழுதியிருப்பது அவர் அண்ணாவின் எழுத்துக்களை படிக்கவே இல்லை என்பதை காட்டுகிறது.

பிளஸ் டூ வில் நான் டீடேயிலில் உள்ள “செவ்வாழை” சிறுகதையே நான் படித்த மிகத் தரமான சிறுகதை என்பேன்.

சாருவின் அதுமாதிரி கமெண்டுகளை படிப்பர்வர்கள் சி.என்.அண்ணாத்துரையின் எழுத்துக்கள் என்றாலே “டுபுக்கு” என்று நினைத்து விடக்கூடாதல்லவா? அதற்குதான் இதை எழுதுகிறேன்.

‘கம்பரசம்’ கம்பர்பற்றி அண்ணா எழுதிய விமர்சன நூல்.கம்பர் பற்றி மிகக்கடுமையாக கம்பர் வலியத்திணித்த ஆபாசம் பற்றிய ஆதாரங்களாக அவர் நிறைய பாயிண்டுகளை வைக்கிறார்.

அதில் ஒன்று. அண்ணா எவ்வளவு அழகாக அவர் சொல்லும் கூற்றை ஒரு தேற்றமாக கொண்டுவருகிறார் பாருங்கள். ( அந்த எச்ஸ்டிராக்டை நான் எழுதுகிறேன்).

<<இங்கிலாதிலுள்ள வெண்டிரீ என்ற வட்டாரத்து பிரபு,கொடுங்கோலன் தன் மக்களின் மீது மிகக்கடுமையான வரிகளை விதிக்கிறான்.

மக்கள் வரியால் இன்னும் ஏழையாகி உணவுக்கே கஸ்டபடுகிறார்கள்.பிரபுவின் மனைவி ’காடிவா’ பிரபுவிடம் மக்களுக்காக வாதாடுகிறாள். பிரபுவின் மனது கரையவில்லை.

காடிவா திரும்ப திரும்ப இது பற்றியே பேச, பிரபு சொல்கிறார் “என்ன நீ மக்களுக்காக இவ்வளவு கரிசனம் காட்டுகிறாய்.அவ்வளவு மக்களை உனக்கு பிடிக்குமென்றால் ஒன்று செய்.உடலில் துணியில்லாமல் நிர்வாணமாக இந்த நகரத்தை சுற்றிவா.நான் வரியை ரத்து செய்கிறேன்.”

காடிவா அதை செய்ய மாட்டாள் என்று பிரபு நினைத்தார்.ஆனால் காடிவா அப்படி செய்யத் துணிந்தாள் மக்களுக்காக.

இதை கவிஞர் டென்னிசன் எவ்வளவு நாகரீகமாக சொல்கிறார்.பாருங்கள்.ஒரு பெண் நிர்வாணமாக உலா வருகிறாள்.அதையும் இடக்கரடக்கலாகவே சொல்கிறார் டென்னிசன்.

Unclasped th wedded
Eagles of her belt
The grim earl's gift

She linger'd looking
Like summer moon
Half-dipt in cloud

<இரும்பனைய நெஞ்சுடையோன் பரிசளித்த இடையணியைக் களைந்தாள்.கணமென்று கவலை கொண்டாள்.

முகில் மூடிய முழுமதிபோல் நின்றாள்>

Then She rode forth
clothed on with chasity

<கற்பெனும் ஆடை மாட்டி காரிகை குதிரையில் ஏறி சென்றாள்>

இதே மாதிரியான ஒரு காட்சி கம்பருக்கு கிடைத்திருந்தால் அதில் அவர் எவ்வளவு ஆபாசத்தை புகுத்தியிருப்பார் பாருங்கள்.>>

இப்படி போகிறது அண்ணாவின் எழுத்துக்கள்.

எழுத்தில் அவர் சொல்லும் ஒவ்வொரு உதாரணங்களும் தினுசுகளும் அவர் அறிவை பறைச்சாற்றுவதோடு மட்டுமில்லாமல்,வாசிப்பவர்களுக்கும் நிறைய நிறைய விசயங்களை கற்றுக்கொடுக்கிறது.

பொதுவாக அண்ணாதுரையை கிண்டல் செய்வது முற்போக்கு இலக்கியவாதியின் முதல் அடையாளமாக இருக்கிறது.

என்னைப்போன்று,இலக்கியத்தை இப்போதுதன் வாசிப்பவர்கள் இவர்கள் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாது.அண்ணாவிடமும் நிறைய சரக்கு இருக்கிறது என்பதை சொல்வதற்காக இதை எழுதுகிறேன்.

தகுதியே இல்லாமல் நிறையபேர் விமர்சனம் எழுதுவதாக நண்பர் பிரவீன் வெங்கடேக்ஷ் வருந்தியிருந்தார்.

ஆனால் தகுதியுள்ள பலஎழுத்தாளர்கள் கூட இது மாதிரி பொறுப்பில்லாத சிறுபிள்ளைத்தனாமான வார்த்தைகளை கூறுவது வருத்தமாய்தான் உள்ளது.

என்ன செய்ய அவர்களிடம் ஞானம் உள்ளது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துதான் அந்த ஞானப்பாலை குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment