Tuesday 2 October 2012

இடஒதுக்கீட்டை புரிந்து கொள்ள ஒரு கதை...

பஸ்ஸில் கூட்டம் அதிகமாய் இருந்தது.

மகளிர் என்று போர்டு போட்டிருந்த இடங்களில் உட்கார்ந்து கதைத்து கொண்டும் சிரித்து கொண்டும் பெண்கள் கூட்டம் போய் கொண்டிருந்தது.

அப்போது அங்கே ஒருவர் ஏறினார். 

நோயால் நோஞ்சானாகி போனவர்.

அவருக்கு உட்கார்ந்தால் தேவலை என்று நோய் படுத்துகிறது. 

ஒரே ஒரு பெண்களுக்கு ஒதுக்கபட்ட சீட்டு காலியாக சட்டென்று உட்கார்ந்தார். ”இது பெண்கள் அமரும் இடம், இது எனக்குதான் சொந்தம் நீங்கள் எழுந்திருங்கள் என்று கறாராய் பேசிய பெண்ணை பார்த்து ஆண்கள் எல்லோரும் எரிச்சலுற்றனர்.

அதில் ஒரு ஆண் சொன்னார் “ அம்மா. இதோ இந்த மெலிந்த நண்பர் ஆணாய் இருக்கலாம். ஆனால் அவரை பாருங்கள்.

அவர் வலிமை அளவில் பெண்களை விட ரொம்பவும் கம்மியாகவே இருக்கிறார்.அவருக்கு அந்த சீட்டில் உட்க்கார எல்லா தகுதியும் இருக்கிறது. அவர் உட்காரட்டும் என்று சொல்ல , “இல்லை இது இடஒதுக்கீடு” சீட் அதனால் எனக்குதான் சொந்தம் என்று அந்த பெண் அவரை எழும்ப வைத்து தான் அமர்ந்து கொண்டாள்.

ஆண்கள் கூட்டம் வெதும்பியது.

அந்த நோயாளி பயணிக்கு எல்லா தகுதி இருந்தாலும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்று புலம்பியது.

ஒரு ஆண் “நோயாளி பயணியை பற்றி கதையும் கவிதையும் எழுதினார்”
.
அநீயாயம் நடந்து விட்டது என்று விவாதித்தனர்.

இனிமேல் பெண்கள் சீட் என்று தனியாக ஒதுக்க கூடாது. வலிமையின் அடிப்படையில் சீட் ஒதுக்கினால் கூட ஒத்துகொள்வோம்.

ஆனால் ஆண் பெண் என்று பாலுறுப்பு பேதங்களால் மனித இனத்தை வேறுபடுத்தி ஒரு இனத்துக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்தல் என்ன ஞாயம்.

ஆணும் பெண்ணும் சமம் என்கிறீர்கள். பின் ஏன் பெண்களுக்கு மட்டும் தனி சீட் வேண்டிகிடக்கு என்று பல ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தன.

முடிவில் தர்க்க ரீதியாக பெண்களுக்கு என்ற தனி சீட் இடஒதுக்கீடை பஸ்ஸில் இருந்து எடுத்தார்கள்.

அந்த பழக்கம் இனிமேல் பஸ்களில் இல்லை என்று அறிவித்து விட்டனர்.

ஆண்கள் கொண்டாடினர்.

இதுதான் உண்மையான சமத்துவம். ரிசர்வேசன் எடுக்க பட்ட சமுதாயம்தான் உருப்படும் என்று பாடினர். ஆடினர்.

மறுநாள் டிப்போவில் அந்த பஸ் உள்ளே நுழைய ஆண்கள் , எட்டி, முட்டி, தட்டி, சட்டென்று பஸ்ஸினுள் ஒடினர்.

எல்லா சீட்களையும் ஆக்கிரமிம்பு செய்து கொண்டிருந்தனர் ஆண்கள்.அந்த ஒரே ஒரு நோயாளி பயணிக்கும் ஞாயம் கிடைத்தது. ஆனால் பாருங்கள் ஒரு பெண்ணுக்கு கூட உட்கார சீட்டே கிடைக்கவில்லை.

எல்லா பெண்களும் பஸ்ஸில் நின்று கொண்டிருந்தனர்
.
ஒருத்தருக்கு கூட உட்கார சீட் கிடைக்கவே இல்லை.

இந்த கதை நல்லாயிருக்கா ?

புரியுதா ?

புரியலையா ?

எப்படி இருந்தாலும் ரிசர்வேஸன் தப்பு தான் என்று சொல்கிறீர்களா?

அப்படியானல் ,நீங்கள் பிடித்த முயலை சோதித்து பாருங்கள் அதில் மூன்று கால்கள்தான் இருக்கும்.

No comments:

Post a Comment