Monday 20 August 2012

என்னை காப்பாற்றியது இதுதான்...

இன்று முதலாம் மாடியில் உள்ள ஒரு கடையில் மொபைல் ரீசார்ஜ் செய்ய போனேன். 

கடைக்காரர் ஏதோ மருந்து விற்பவர் போல, உடல் நலம் பற்றி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார்.

அவர் கம்பெனி டானிக் குடியுங்கள் என்றார்.

தன்னுடன் ஞாயிற்றுகிழமை மீட்டிங் வருமாறு சொன்னார். 

நரம்புகள் எப்படி செயல்படும் என்று சொன்னார்.

நான் இளைஞன் ஆனதால் தாம்பத்ய உறவு சரியாய் இருக்கிறதா ? இல்லையென்றால் இந்த டானிக் குடியுங்கள் என்றார்.

நான் அதிலெல்லாம் பிரச்சனை இல்லை என்று பதட்டமாக பதறி மறுத்தேன்.

அப்புறம் என் தொப்பையை பார்த்தார்.

உடலை இந்த டானிக் குறைக்கும் என்றார்.

அவர் பேசிய விதம் முகத்தை முறித்து பேச முடியாமல் செய்தது.

பேசினார் பேசினார் பேசிகொண்டே இருந்தார்.

எப்படி இவரிடம் இருந்து தப்பிக்க என்று யோசிக்க கூட விடாமல் பேசினார்.

அப்போது அது நடந்தது, அவர் ஒங்கி பேசும் போது அவர் நாவில் இருந்து ஒரே ஒரு சிறிய அழகிய உருண்டையான எச்சில் துளி பறந்து என் கூரிய மூக்கில் பட்டது.

பப்பூன் சிகப்பு மூக்கு மாதிரி என் மூக்கு எச்சில் மூக்கானது அழகிலும் அழகு.

இருவரும் அதிர்ந்து நிற்கிறோம்.

எனக்கு அந்த எச்சிலை அவர் முன்னால் துடைத்தால் அவர் மனது கஸ்ட்டபடுமோ என்ற கவலை. ( நல்லவன் நான்) .

அவருக்கோ தர்ம சங்கடம்.

பேச்சை முடித்து என்னை அனுப்பி வைத்தார்.

அவரிடம் என்னை காப்பாற்றிய அவர் எச்சிலுக்கு நன்றி சொல்லி வெளியே வந்தேன்.

அனிச்சையாக கையை மூக்கில் வைத்தேன்.

எச்சில் காய்ந்து போயிருந்தது.

அது எச்சில்தானே ! சல்ஃபூரிக் ஆசிட் இல்லையே என்று நினைத்து நிம்மதியானேன். :))

1 comment: