Saturday 4 August 2012

சுயதம்பட்டமும் ஒரு செய்யுளும்...


இது கொஞ்சம் உருப்படியான பதிவு.

முதலில் கொஞ்சம் சுய தம்பட்டம் இருந்தாலும் கடைசியில் மேட்டர் இருக்கும்.

பொறுமையாக படிக்கம்வும் :)

நாங்கள் “ஆனந்தம்” படத்தில் வருவது மாதிரி நான்கு அண்ணந்தம்பிகள்.

அதில் வரும் அப்பாஸ் (மூன்றாவது பேரழகன்) நான்.

இதில் முதல் அண்ணன் விஞ்ஞானியாய் இருக்கிறார்.

இரண்டாவது அண்ணன் டாக்டராய் (எம்.டி. ஜெனரல் மெடிசின்) இருக்கிறார்.

தம்பி சாஃப்ட்வேர் இன்ஜினராய் இருக்கிறார்.

நான் மெக்கானிக்கல் டிசைன் இன்ஜினராக இருக்கிறேன்.( எவ்வளவு பந்தாவா இருக்கு இத எழுதும் போது )

இரண்டாவது டாக்டர் அண்ணனிடம் இன்று பேசினேன். அதுவருமாரு.

“நாந்தான் விஜய் பேசுறேன்”

“தெரியுது”

“வந்து எனக்கு சென்னைல வேலை கிடைச்சுருக்கு பாத்துக்க.வந்து இரண்டுவாராம் ஆகுது பாத்துக்க.சாரி உங்கிட்ட லேட்டா சொல்றேன்”

“உன் அண்ணி என்ன கிண்டல் பண்றா.நீ வேலை கிடைச்சத சொல்லல. பெரியண்ணன் கார் வாங்கினத என்கிட்ட சொல்லனுன்னு”

“அப்ப நீ மட்டும் ஹைதிரபாத்ல இருக்கும் போது என் பிறந்த நாள் வாழ்த்து சொன்னியா? என் பொண்டாட்டி என்ன கடிச்சி கொதறிட்டா “ என்றேன்.

“சரி விடு விடு யானைக்கும் பானைக்கும் சரியா போச்சு. லூசுல விடு “ என்று அண்ணன் சிரித்தான்.

நான் கேட்டேன்.

“நீ ஒரு செய்யுள் சொல்வே இல்ல பிரதர். “கோடொரு சினையில்” ன்னு அது எனக்கு வேணும்.

“உனக்கு எதுக்குல விஜய் அது வேணும்”

“ஹி ஹி பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுறேன். ஒரு வெரைட்டி வேணும் அதான்”

“சரி சொல்றேன் எழுதிக்க” என்றான் அண்ணன்.

அண்ணனின் ஞாபக சக்தி அதிசயிக்க வைக்கும்.

பார்மக்காலாஜி என்றொரு பேப்பரை கண்டு எல்லோரும் மெடிசினில் கொஞ்சம் பயப்படுவார்கள். ஏனென்றால் நிறைய மருந்து பேரை ஞாபகம் வைக்க வேண்டும். அண்ணன் அதில் அசால்டு ஆறுமுகமாக பாஸானார் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.( அப்படி புகழ வேண்டியதுதான். நீங்க என்ன செக் பண்ணவா போறீங்க டியர்ஸ் :) )

சரி இப்போ செய்யுள்.இத எழுதினது யாருன்னு சரியா ஞாபகம் இல்ல.

....................................................

கோடொரு சினையில் காகம்

கூடுவைத்து அனேக காலம்

பேடொடு கூடி வாழும்

பெருமர பொந்தில் வந்தே

ஆடியல் கரும்பாம்பொன்று

அதனிடும் முட்டையெல்லாம்

நாடியே குடித்து போக

நலிந்துளம் மெலிந்து வாடி

தன்னுயிர் பாங்கனான

சாம்புகன் அருகில் போய்



இங்கு என்ன செய்குவன் நான் என



நீ போய் மன்னவன் தேவியாடும்

மஞ்சன சாலை குக்கு

பொன்னணி கொண்டு வந்து

போடுக பொந்தில் என



காகம் அப்படியே செய்ய



காவலன் ஏவலாளர் ஏகி

மாமரப் பொந்தை ஈந்தனர்

ஈரும் போதில்

நாகம் அங்கிருந்து சீற

நறுக்கினர் இரு துண்டுகளாக

ஆகையால்

உபாயத்தாலிலாதிலை

உரைத்தல நன்றே.

....................................................


ரைட்டு... இப்போ இதற்கு விளக்கம் கிழே

ஊர் கோடியில் மரத்தின் கிளையில் காகம்
பல காலமாய் கூட்டை கட்டி
மனைவியோடு கூடி வாழ்ந்தது.
அந்த மரத்தின் பொந்தில் உள்ள
ஆடும் கரும் பாம்பு ஒன்று வந்து.
காகம் இடும் முட்டையெல்லாம்
விரும்பி குடித்து விட
காகம் மனம் வாடி

தன் உயிர் நண்பனான
நரியிடம் முறையிட்டு
என்ன பண்ணுவேன் என்றது.

நீ போய் மன்னனின் மனைவியான ராணி
குளத்தில் குளிக்கும் போது
அவள் பொன் நகைகளை கொண்டு வந்து
பாம்பின் பொந்தில் போடு என்றது நரி.

காகம் நரி சொன்னபடியே செய்ய

மன்னரின் படைவீரர்களை ஏவி
மாமரப் பொந்தை சோதித்தனர்.
சோதிக்கும் போது
பாம்பு அங்கிருந்து சீற
பாம்பை நறுக்கினர் இரு துண்டுகளாக
அதனால் தந்திரத்தால் சாதிக்க முடியாத காரியம் இல்லை.
என்று உரைத்தல் நல்லதே.

இந்த செய்யுளை சொன்ன அண்ணணுக்கு நன்றி.

இதை ஞாபகம் வைத்து அண்ணனிடம் கேட்டு எழுதிய என்னையும் பாராட்டி விடுங்கள்...

ஐ லைக் பப்ளிசிட்டி ... :))

No comments:

Post a Comment