Sunday 5 August 2012

கதை போல ஒன்று - 35

ஏங்க உங்க துணியல்லாம் பேக் பண்ணிட்டீங்களா?

ஆமா. என் ஜீன்ஸ்ஸ வைச்சிட்டேன். அப்புறம் சர்ட் மூணையும் வைச்சுட்டேன். பனிய... 

”ஏங்க வச்சிட்டேனான்னு கேட்டா. வச்சிசிட்டேன்னு சொன்னா போதும். சும்மா தொன தொனன்னு நீங்க எப்படி பேக் பண்ணுனீங்கன்னு விளக்கி போரடிக்க வேண்டாம்”

மனைவி சட்டென்று சொன்ன போது அவமானபட்டேன். அவள் முகத்தை பார்த்தேன். குறும்பாகத்தான் சொல்லி இருக்கிறாள். ஆனாலும் வலித
்தது.

சார்மினார் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க கால் டாக்சியில் ஏறி செகந்திராபாத் ரெயில்வே ஸ்டேசனை நோக்கி போகிறோம்.

மீரா சேட்டை செய்து கொண்டே வர, மனைவி ஆர்வமாக பல விசயங்களை பேச, எனக்கோ அடிபட்ட விக்ஷம் உள்ளேயே கிடக்கிறது.

“வர வர இவளக்கு தன்னம்பிக்கை ஓவரா இருக்கு.” எனபது மாதிரி யோசித்து கொண்டே இருந்தேன்.

அது தெரியாமல் தன் தோழி பத்மா பத்தி பேசி கொண்டே வந்தாள்.

பத்மா ரொம்பவும் அழகாக இருப்பாள். அவளை பற்றி நானே அடிக்கடி விசாரிப்பேன். ஏனென்றால் பத்மா கருணை மிகுந்தவளும் கூட.

எங்களுக்கு ஹைதிராபாத்தில் மாரல் சப்போர்ட்டாக உள்ள ஒரே ஜீவன். மேலும் சான்ஸ் கிடைக்கிறது என்பதற்காக என்னை அண்ணா என்று கூப்பிடாமல் இருப்பதும் எனக்கு பிடித்திருந்தது.

ஆனால் அன்று அவளை ப்த்தி பேசியும் கூட மனது, வீட்டுக்காரி என்னை திட்டியதையே சுத்தி சுத்தி வந்தது.

வ்ரிசையாக மூன்று வருடம் குடும்பம் நடத்தியதில், அவள் செய்த நெகட்டிவ் பாயிண்ட்ஸ் எல்லாத்தையும் நினைத்து பார்த்தேன்.

”என் தம்பிய கிண்டல் பண்ணாதீங்க, நீங்க மட்டும் என்னத்த சம்பாதிசிட்டு இருக்கீங்க” என்று என் அம்மா முன் என்னை திட்டியது.

“யம்மா ! அவங்க லூசும்மா. அப்படித்தான் பேசுவாங்க “ என்று அவள் வீட்டார் முன் என்னை பேசியது”

“அட இவுங்க வேஸ்ட்டு பிரபு. லேண்ட் வாங்கிறதுலல்லாம் இண்டிரஸ்ட்டே கிடையாது. சும்மா புக்க படிச்சிட்டு ஸீன் போடுவாங்க” என்று தன் தோழனிடம் என்னை அவமானபடுத்தியது. என்று எல்லாம் ஞாபகம் வந்தது.

நான் என்ன யோசிக்கிறேன் என்று தெரியாமல் அப்பாவியாய் மனைவி தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தாள்.

விக்ஷம் இறங்கவே இல்லை.

எனக்கு தினமும் உபசரணை செய்வதையோ, டயர்டாய் இருக்கிறது என்று சொல்லும் போதெல்லாம் கால் அமுக்கி விடுவதையோ, இன்னும் பல பாஸிட்டிவ் பாயிண்டுகளையும் மறந்தே போய்விட்டேன்.

என்னை எப்படி தொண தொணவென்று பேசுவதாக சொல்லலாம்.

செகந்திராபாத் ஸ்டேசன் பரபரப்பாய் இருந்தது.

வழக்கமாய் பிளாட்பார்ம் ஒன்றில் நிற்கும் சார்மினார் அன்று, பிளாட்பார்ம் பத்தில் நிற்க, போர்ட்டரிடம் விசாரித்தால், நூற்றி அம்பது ரூபாய் கேட்க் எரிச்சலானேன்.

டிராலி சூட்கேசின் மேல் ,இன்னொரு பையை வைத்து, இடது கையில் இன்னொரு பையை தூக்கி, முதுகில் கனத்த லேப்டாபோடு நடக்க, மீராவை தூக்கி கொண்டு மனைவி பின் தொடர்கிறாள்.

மீரா வேறு அழுது கொண்டே இருக்கிறாள்.

பத்தாவது பிளாட்பார்ம் வ்ரும்போது சோர்வின் உச்சத்துக்கு போனேன்.

கோச் நம்பர் எஸ் 12. உடம்பெல்லாம் வலித்தது.

மீரா அழுகையை கூட்டியிருந்தாள். எரிச்சலாய் வந்தது.

”ஏம்பிள இவ இப்படி கத்துறா ” என்று கத்தினேன்.

“தெரியலையேங்க ‘

“சாப்பிட்டாளா”

“ஆமா காலையில் ரஸ்க் சாப்பிட்டா. அப்புறம் காம்பிளான் குடிச்சா. மத்தியானம் சோறு... “

இடைமறித்தேன்.

“அட லூசு சாப்பிட்டாளா இல்லையான்னு கேட்டா. ஆமா வயித்துக்கு சாப்பிட்டா. இல்லன்னா. இல்ல சாப்பிடல. அப்படி சொல்லனும். சும்மா தொண தொணன்னு ஒண்ணு ஒண்ணா சொன்னா.எனக்கு வேற வேலையில்லையா. நீ சொல்ற எல்லாத்தையும் கேட்கனுமா.என்ன மண்டைக்கு வழியில்லதவன்னு நினைச்சுகிட்டியா.உன் மூஞ்சி பாத்தாலே கடுப்பா இருக்கு ”

என்று உச்சஸ்தாயில், குரலை உயர்த்தி, வெறி பிடித்தவன் போல் கத்துவதை மொத்த பிளாட்பார்ம் நம்பர் பத்தும் பார்க்க, மனைவி கண்களில் கண்ணீர் வடிய, மீராவும் அழுகையை நிறுத்தி பயத்தோடு என்னை பார்த்தாள்.

No comments:

Post a Comment