Thursday 16 April 2015

ஊருக்கே தெரிந்த சிரிப்புக் கதைகள்...

சில ஜோக்குகள் ஊருக்கே தெரியும்.ஆனாலும் அதை சமயம் கிடைக்கும் போது வெளியே சொல்லும் ஆனந்தம் அடைவேன்.

அல்லது எப்ப சான்ஸ் கிடைத்தாலும் சொல்வேன்.
அந்த ஊருக்கே தெரிந்த இரண்டு கதைகள் வருமாறு.

1.வற்றிய குளத்திலிருந்து வளக்குளத்துக்கு போய்விடலாம் என்று இரண்டு கொக்குகளும் தீர்மானித்த போது, அவர்களின் நண்பன் ஆமை முழித்து நின்றது..

”பறந்து செல்ல எங்களுக்கு இறக்கை இருக்கிறது, உனக்கோ குவிந்த ஒடு அல்லவா இருக்கிறது ஆமை நண்பனே.எப்படி உன்னைக் கூட்டிச் செல்வோம்” என்று கொக்குகள் திணற,

ஆமை யோசனையொன்றை சொன்னது.

“குச்சி. குச்சியின் இரண்டு பக்கமும் உங்கள் அலகுகள்.நடுவே என் வாய்” என்றது.

கொக்குகள் நண்பனின் அறிவை மகிழ்ந்து வலிகுச்சி எடுத்து, அலகில் பொருத்தி, நடுப்பகுதியை ஆமையின் வாய்க்கு கொடுத்தன.

பறக்கும் பறவைகள் நடுவே ஆமை குச்சியைக் கடித்து செல்வதப் பார்த்த மக்கள் அதிசயப்பட்டனர்.

“இந்த கொக்குகளுக்கு என்ன அறிவு பாத்தியா.ஆமை எவ்வளோ அழகா தூக்கிட்டு போது” என்றார்கள்.

தன்னுடைய அறிவை நண்பர்களின் அறிவாக மற்றவர்கள் சொல்வதைக் ஆமையால் பொறுக்க முடியவில்லை.

“கொய்யால அது என் சொந்த ஐடியா” என்று ஆமை சொல்லி முடிக்கும் போது கீழே பாறையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

2.அதிகப்படியான உழைப்பால், களைத்திருந்த  மூன்று ஆமைகள் டீ சாப்பிட போயிருந்தன.

சுடான டீ ஆமைகள் முன் நீராவியைக் கொடுத்தபடி, ”என்னைக் குடி என்னைக்குடி “ என்று நடனம் ஆடின.

ஆனால் மூன்று ஆமைகளும் பணம் கொண்டுவரவில்லை என்பதை அப்போதுதான் தற்செயலாக தெரிந்து கொண்டன.

நீ கொண்டுவா
ஏன் நீ போயேன்.
நீ போனா ஆகாதோ
என்று போட்டிப் போட்டன.

எப்படியோ மூன்றாம் ஆமையை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தன முதல் இரண்டு ஆமைகள்.மூன்றாம் ஆமை ஒரே ஒரு கண்டிஷனோடு பணம் எடுக்க போனது.

“நா போவேன்.ஆனா நா பணம் எடுத்துட்டு வர்ற வரைக்கும் நீங்க டீ சாப்பிடக்கூடாது சரியா”

“சரி” என்று சம்மதம் தெரிவித்து அனுப்பி வைத்தன.
போன ஆமை வரவே இல்லை. வெகுநேரம் காத்திருந்த முதல் இரண்டு ஆமைகளும் சரி தலைவலிக்கிறது டீ சாப்பிடுவோம் என்று டீக் கோப்பையை உதடு நோக்கி எடுத்துச் சொல்லும் போது.

“கொய்யால தெரியும்டா உங்க கேவலமான புத்தி.நீங்க இப்படி செய்வீங்கன்னு தெரிஞ்சிதாண்டா நா மரத்துக்குப் பின்னாடியே ஒளிஞ்சிருந்தேன்” என்றதாம்.

இந்த இரண்டு கதைகள் சொல்லும் போதும் “கொய்யால” என்ற் வார்த்தையை உச்சரிக்க ஆர்வமாயிருப்பேன்.

அதைச் சொல்லும் போதே சிரிப்பு தெறிக்கும் எனக்கு :) :)

No comments:

Post a Comment