Tuesday 2 December 2014

மனைவியை அடித்தால்...

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நாட்டிங்ஹாம் பகுதியைச் சுற்றிய கிராமங்களில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது.
மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தும் கணவனைத் திருத்த கிராமக்குழுக்கள் செய்யும் செயல் அது.
பெரிய டிரம்பட்கள்,பழைய பாத்திரங்கள்,ஊத்துகள் என்று எடுத்துக் கொண்டு அந்த குழு கிராமத்துக்குள் உலா வரும்.
மனைவியை அடிப்பதாக குற்றம் சொல்லப்படும் நபரின் வீட்டின் முன் நின்று சத்தமாக நாராசமாக ஊருக்கே கேட்கும் படி ஒரு பாட்டைப் பாடுவார்கள்.
அந்தப் பாட்டை நான் கொஞ்சம் மொக்கையாய் எனக்கு தெரிந்த அளவில் தமிழில் கொடுக்கிறேன்.எஸன்ஸ் அளவில் சரிதான்.
// நம்மூரில் ஒரு மனிதன்
அவன் பெயர் ஹோட்ஜ் போட்ஜாம்.
எப்போதும் மனைவியை அடிப்பவனாம்
வெட்கமில்லாத வெறும் பயலாம்.
அவள் சிநேகமற்றவளா அடிக்க;
இல்லை இல்லை
அவள் கோபக்காரியா அடிக்க;
இல்லை இல்லை
கால்சட்டை போட ஆசைப்பட்டால்
காலால் மிதிப்பானா பாவிப்பயல். //
இப்படி பாடி அவனை அவமானப்படுத்துவார்கள்.அது மாதிரி மூன்று நாட்கள் அப்படி இசைக் கச்சேரி நடக்கும்.
அதன் பின் மனைவியை அடிப்பவனின் கொடும்பாவியை ஊருக்கு நடுவே வைத்து எரிப்பார்கள்.
நம்ம ஊரில் 2014 இல இதே சிஸ்டம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால்,
ஒரு இரவு கூட நம்மால் தூங்கமுடியாத அளவுக்கு நாரச இசை நம் காதுகளில் விழும்
என்று சொன்னால்
அதை யாரும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment