Friday 23 March 2012

நட்பு

6 th முதல் +2 வரை நானும் உமர் ஃபாரூக்கும் உயிர் நண்பர்கள்.ஓன்றாகவே அலைவோம்.
பேசி கொண்டே இருப்போம்.பாக்கியராஜின் “இன்று போய் நாளை வா” படத்தை காட்சி மாறாமல் சிரிக்கும்படியாக விவரிப்பான்.புதிதாக கற்ற கெட்ட வார்த்தைகள் அனைத்தும் பரஸ்பரம் பிரயோகிப்போம்.டியுசன் காசை எடுத்து வருவான்.கூச்சமே இல்லாமல் பரோட்டா வாங்கி தின்போம்.
காலத்தின் போக்கில் பள்ளிக்கு பிறகு பிரிந்து விட்டோம்.பத்து வருடம் பிறகு அவன் தொலைபேசி எண் எப்படியோ கண்டுபிடித்து பரவசமாய் பேசினேன்.
” மக்கா நா விஜய் பேசுறேன்ல !” .
“ மறுமுனையில் “ஆ ஆங் சொல்லுங்க பாஸ்” .
“யல நாயே, எதுக்கு இப்படி டீசண்டா பேசி சீன் போடுர.”
“பாஸ், அது ...(சிரிப்பு) அப்படி வரமாட்டேங்குது பாஸ்’
பின்னர் formal யாய் பேசி வைத்து விட்டேன்.
உமர் ஃபாரூக் நீங்க என்று மரியாதையாய் விளித்ததினால் நிலை குலைந்தேன்.
செம கடியாய் இருந்தது.ஏதோ ஒன்றை இழந்து விட்டேனோ! என்னவோ !
 

No comments:

Post a Comment