Friday 23 March 2012

கந்தர்வன்

மிகக்குறைவாய்தான் அவர் எழுத்தை படித்திருக்கிறேன்.ஆனாலும் கந்தவர்வன் எனக்கு பிடித்த எழுத்தாளர்.அதில் ஒரு சிறுகதையின் சாறு வருமாறு...
”பனைமரத்தை தனி ஆளாக சாய்க்கும் கலை” தெரிந்த வித்தைகாரன் ,ஒரு ஊருக்கு வருகிறான்.அவன் திறமையை வெளிப்படுத்த ஊரார் சம்மதிகின்றனர்.சொன்னபடியே பனைமரத்தை தன் தோளால் இடித்தும், கயிறு வைத்து இழுத்தும் மரத்தை வீழ்த்தி காட்டுகிறான்.
ஊரார் அவனை பாராட்டுகிறார்கள்.அன்று மாலை ஒரு பாத்திரத்தை கையில் வைத்து கொண்டும்,ஒரு துணியை தரையில் விரித்து கொண்டும் பிச்சைக்காக அமைதியாக காத்திருக்கிறான்.
மக்கள் அவனை ”இவ்வளவு பலம்” இருந்தும் திருடாமலும், பிறரை மிரட்டி பணம் பறிக்காமல் இருக்கும் நல்ல குணத்தை பாராட்டி பிச்சையிடுகின்றனர். 

No comments:

Post a Comment