Friday 23 March 2012

அராஜகம்

ஆறாம் வகுப்பு படிக்கும் போது சுப்பையா வாத்தியார், வகுப்பில் தேவையில்லாமல் சிரித்த “குமார லிங்கேஸ்வரனை” கூப்பிட்டு அடித்தார்.
அவன் 5 ஆம் வகுப்பு வரை படித்த பள்ளியின் பெயர் கேட்டார்,"christ the king" school என்ற பதில் கிடைக்க , வகுப்பில் யாரல்லாம் "christ the king" படிக்கிறீர்கள் என விசாரிக்க, நான்கைந்து மாணவர்கள் எழுந்தனர்.
எல்லோரையும் அழைத்து வட்டமாக நிற்க வைத்தார்.ஒருவர் காதை ஒருவர் பிடித்து சுற்றி சுற்றி வர வேண்டும்.சுப்பையா சார் அடிப்பார்.குமார லிங்கேஸ்வரன் செய்த தப்புக்கு 5 அப்பாவிகள் ஏன் அடி வாங்க வேண்டும் என்று கேட்கும் வெறி வந்தது.
சுப்பையா சாரின் பிரம்பின் நீளமும், “விசுக் விசுக்” சத்தமும் என்னை முடக்கி போட்டன.ஆனால் அன்று அதை நினைத்து நினைத்து வெம்பி தூங்கி போனதை இப்போது நினைத்தாலும் பெருமிதமாக இருக்கிறது என் மீது எனக்கே...
 

No comments:

Post a Comment