Friday 23 March 2012

செஸ்ட்டர்டன்

நேற்று திருவான்மியூர் எலியட்ஸ் பீச்சில் , குழந்தைக்கு பலூன் வாங்கி கொடுக்க,கை தவறி மீரா பலூனை விட அதை ஓடிப்போய் பிடிக்காமல் chesterton யின் "On running after one's hat" கட்டுரையை பற்றி யோசித்தேன். +2 ஆங்கில text book யில் படித்தது.எளிய தன்னம்பிக்கை கட்டுரை.படிப்பவர்களுக்கு கண்டிப்பாய் தன்னம்பிக்கை வெறி ஏற்றும்.பலூன் என்னவாயிற்று என்று கேட்கிறீர்கள்.மனைவி ஒடி மூச்சிரைக்க எடுத்து வந்தாள்.(நான்தான் கம்பீரமாய் சிந்தனை செய்து கொண்டிருகிறேனே). அவள் மூச்சிரைப்பு அடங்குவதற்குள் , கட்டுரை பற்றி வியாக்கியானம் பேச ஆரம்பிக்க “ஒரே ஒரூ பார்வை “ பார்த்தாள்.அமைதியாக கடலை கொறிக்க ஆரம்பித்தேன்.

இது சும்மா படிக்க :)

<“நீங்கள் உங்கள் இயலாமையை தத்துவமாக்கி இன்புறுகீறீர்கள்’ - இந்திரா பார்த்தசாரதி > 

No comments:

Post a Comment