Thursday 16 March 2017

கதைச்சுருக்கம்

கதைச்சுருக்கம் சொல்வதை ஆங்கிலத்தில் Quintessence என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
Quintessence என்றால் ஒரு விஷயத்தின் எஸன்ஸ் ஆகும்.
என்னப் பொறுத்தவரை கதைச்சுருக்கம் சொல்வது என்பதும் ஒரு கலைதான். ஒரு கதையின் ஜீவன் போகாமல் அதை சுருங்கச் சொல்வது என்பது கலைதான். சிலர் சினிமா பார்த்துவிட்டு கதை சொன்னால் நமக்கு அதிகம் பிடிக்கும்.
அவர்கள் சொல்லும் விதம் அவ்வளவு நன்றாக இருக்கும். கதைச்சுருக்கம் என்று பேசும் போது எனக்கு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்கள் நினைவு வரும்.
ஏனென்றால் ”விமலாதித்த மாமல்லன் அவர்கள்” இந்தக் கதைச்சுருக்கம் சொல்வதை எப்போதும் எதிர்த்தே வருவார்.
கதைச்சுருக்கம் பாவம் அப்படி செய்யக்கூடாது. அப்படி செய்யவே கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
நானும் நினைப்பேன். “பரவாயில்லையே ”விமலாத்தித்த மாமல்லன் அவர்கள்” அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதைத்தான் விரும்பவில்லை. ஆனால் மூலப்படைப்பாளிகள் படைப்புகளின் மேல் பாசமாக இருக்கிறாரே என்று நினைத்தேன்.
ஒரு மனிதன் எவ்வளவுதான் கீழ்மையாக இருந்தாலும் ஏதாவது நல்ல குணம், நல்ல அக்கறை இருக்கும்.
அது மாதிரி ‘விமலாதித்த மாமல்லன் அவர்கள்” எவ்வளவுதான் கீழ்மையான, மொக்கையான குணத்தைக் கொண்டிருந்தாலும் இந்தக் கதைச்சுருக்க விஷயத்தில் ஒரு நல்லப் பண்பை வைத்திருக்கிறாரே என்று நினைத்தேன்.
ஆனால் சூழ்நிலைப் பாருங்கள் ஒருவரை ஒரு விஷயத்தில் நல்லத் தன்மை உடையவராக நினைத்து வைத்திருப்போம். ஆனால் அவரே அதைக் கெடுத்துக் கொள்வார். அது மாதிரி “விமலாதித்த மாமல்லன் அவர்கள்” தங்கள் கதைச்சுருக்க எதிர்ப்பு நல்லப் பண்பை (?) கெடுத்துக் கொண்டார்.
விகடனின் இலக்கிய இதழான தடம் இதழில் ”விமலாதித்த மாமல்லன் அவர்கள்” சென்னையில் நடந்த உலகத் திரைப்பட விழா பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
நானும் சரி படித்துப் பார்ப்போமே என்று படித்தேன்.
படித்தால் கட்டுரையில் ஒரு சுக்கும் இல்லை. மறுபடியும் ஒருதடவைப் படித்தேன். அவர் பார்த்த திரைப்படங்களின் கதைச்சுருக்கத்தை எழுதி வைத்திருந்தார்.
ஆஹா அந்தோணி.. ஊரெல்லாம் கதைச்சுருக்கம் தவறு தவறு என்று சொன்ன ’விமலாதித்த மாமல்லன் அவர்கள்’ இப்போது ’தடம்’ ஒருவார்த்தைக் கேட்டுக் கொண்டவுடன் சடாரென்று இறங்கிவிட்டாரே என்று தோன்றியது. அவர் கொள்கையை விட்டுவிட்டாரே என்று தோன்றியது.
அப்போதுதான் இன்னொரு எழுத்தாளர் ’விமலாதித்த மாமல்லன் அவர்கள்’ பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.
என்ன சொன்னார் “விமலாதித்த மாமல்லன்னுங்கிறவரு நீங்க நினைக்கிறது மாதிரி பத்திரிக்கைக்காரங்ககிட்ட தன் கொள்கைக்காக கறாரா நடக்குற ஆசாமி கிடையாது. அவர் ஊடகக் நண்பர்களிடம் ரொம்ப அன்பாகத்தான் நடந்து கொள்வார். காரியமான ஒரு எழுத்தாளர்” என்றார்.
தடம் இதழில் அவர் எழுதிய திரைப்படங்களின் கதைச்சுருக்கத்தைப் பார்க்கும் போது அவரைப் பற்றிக் கேள்விப்பட்டது சரிதான் என்று தோன்றியது. கதைச்சுருக்கமே தவறு என்பவர் விழுந்து விழுந்த கதைச்சுருக்கம் எழுதியிருக்கிறாரே.
சரி அந்தக் கதைச்சுருக்கமாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று பார்த்தால் பகவானே சுத்த போர். அந்த எழுத்தில் ஒரு ஜீவன் இல்லை.
முகநூலில் இதைவிட பல 20 வயது இளைஞர்கள் நல்ல
கிரியேட்டிவாக கதைச்சுருக்கத்தை எழுதுவார்கள்.
நான் கறாரான இலக்கியவாதி இலக்கியவாதி என்று சொல்லி இலக்கிய ரசனை சுத்தமாக இல்லாமல் ஆகிவிட்டாரே என்று வருந்தினேன்.
கிரியேட்டிவிட்டி அவர் மனதில் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது பற்றி கொஞ்சம் கவலையாய்தான் இருந்தது.
ஏன் ”விமலாதித்த மாமல்லன் அவர்கள்” கிரியேட்டிவிட்டி இல்லாமல் போனார்.
எப்போது அவர் கிரியேட்டிவிட்டி சுத்தமாக அழிந்தது.
கழிந்த ஒருவருடமாக அவர் ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ச்சியாக பல பதிவர்களை திட்டி திட்டி எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில்தான் அவர் கிரியேட்டிவிட்டியை இழக்கிறார்.
அது எப்படி ஒருவர் பலரை ஏதோ ஒரு காரணத்துக்காக திட்டும் போது கிரியேட்டிவிட்டி இழப்பார்.
இந்தக் கேள்வி நம் எல்லோருக்கும் இருக்கும்.
ஏனென்றால் “விமலாதித்த மாமல்லன் அவர்கள்” மனதுக்கு தன் பக்கம் ஞாயம் இல்லை என்பது நன்றாகத்தெரியும். தான் பெண்களைப் பற்றி அநாகரிமாக எழுதியது பற்றி அவருக்கு நன்றாகத்தெரியும்.
தன் மனதுக்கு தான் செய்த தவறு தெரியும் போது, அதுவும் பலர் முன்னிலையில் தெரியும் போது ஒரு மனிதன் மூன்று முடிவெடுப்பான்.
அந்த மூன்று முடிவுகள்
1.அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி இருந்துவிடுவான். அல்லது அந்த இடத்தை விட்டு ஒடிவிடுவான்.
2. உடனே தன் தவறை உணர்ந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்பான்.
3. தன் மீது தவறே இல்லை என்று சாதித்து எதிராளியை மேலும் தூற்றுவான். அநாகரிகமாக பேசுவான்.
// அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி ஒடிவிடுவான்//
என்று சொன்னேன் பாருங்கள்
அது எனக்கு ஒருமுறை நடந்தது. நான் அப்படி நடந்து கொண்டேன்.
ஒருமுறை லைப்ரரியில் நான்காவது மாடியில் இருந்து கீழே இறங்க லிப்டுக்கு ஒடிப்போகும் போது அங்கே லிப்ட் நின்று கொண்டிருந்தது.
உள்ளே மூன்று இளைஞர்கள் வெளியேயும் உள்ளேயுமாக நடந்து கொண்டிருந்தார்கள்.
நான் என்ன நினைத்துவிட்டேன். அவர்கள் நண்பர்கள்தாம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக லிப்டை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அவர்களை தவறாக நினைத்துவிட்டேன்.
உடனே கத்தினேன்” ஏன் லிஃப்ட நிறுத்தி வைச்சிருக்கீங்க நா போகனும்” என்றேன். அதற்கு அந்த இளைஞர்கள் பொறுமையாக “இல்லங்க லிஃப்ட் வேலை செய்யல போல, அதனாலத்தான் ஆப்பிரேட்டரத் தேடுறோம்” என்றார்கள்.
எனக்கு வெட்கமாகிவிட்டது. லிப்ட் பாக்கும் போது அங்கே ஆப்பிரேட்டர் இல்லை. ச்சே தப்பா நினைச்சிட்டோமே என்று வெட்கப்பட்டு அந்த இடத்தை விட்டு ஒடிவந்துவிட்டேன். அதாவது எனக்கு மன்னிப்பு கேட்கும் அளவுக்கு கூட முடியவில்லை. அவ்வளவு வெட்கமாகிப் போய்விட்டது.
நான் அப்படி ஒடிப்போன இடத்தில், என் இடத்தில் ”விமலாதித்த மாமல்லன் அவர்கள்” இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா? தான் தவறு செய்தது அப்பட்டமாக தெரிந்திருந்தாலும் அந்த மிகுதியான வெட்கத்தையும் அவமானத்தையும் மறைத்து மறுபடியும் லிப்டில் நிற்கும் இளைஞர்கள் மேலேயே பதிலைப் போட்டிருப்பார்
“ஏய் நீங்கதான் இந்த லிப்ட ஏதோ ஒடைச்சி வெச்சிருக்கீங்க”| என்று விதண்டாவாதம் பேசியிருப்பார்.
அதை அந்த இளைஞர்கள் சரி போகட்டும் என்று விட்டால் பரவாயில்லை.
ஆனால் இணையத்தில் “விமலாதித்த மாமல்லன் அவர்கள்” அப்படி திட்டிய இளைஞர்களோ மிகவும் திறமையானவர்கள்.
பதிலுக்கு அவரை வாங்கு வாங்கு என்று வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதை அவரால் சரியாக எதிர்க்க முடியவில்லை. பதட்டமாகிவிட்டார்.
இந்தக் கட்டத்தில்தான் அவர் பல பெண் எழுத்தாளர்களையும் அவமானப்படுத்தி எழுத ஆரம்பித்தார்.
இணையத்தில் பலர் மனதில் அவர் அற்பப் புழுவானார். மேலும் பதட்டமானார்.
கிரியேட்டிவிட்டி சுத்தமாக காலியானது.
ஏன் அவரால் எதிர்க்க முடியவில்லை.
“தன் நெஞ்சு அறிந்துதான் தவறு செய்திருக்கிறாரே” தன் மனதுக்கு நியாயம் இல்லாமல் தர்க்கமாக அவரால் போராட முடியவில்லை.
புலம்ப ஆரம்பித்தார்.
குறிப்பாக ஒரு வக்கீல் நண்பர் அவரிடம் தர்க்க ரீதியாக கேள்வி கேட்ட எந்தக் கேள்விக்கும் அவரால் பதில் சொல்லவே முடியவில்லை.
நான் சமுதாயத்துக்கு நல்லது செய்பவன் என்று சொல்லி எழுதி ஒடி ஒளிந்து கொண்டார்.
இது மாதிரி பல விஷயங்களில் ஒருவனின் மனது தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டு வருமாயின் அதில் கிரியேட்டிவிட்டி எங்கே இருந்து வரும்.
கிரியேட்டிவிட்டி இல்லாத மனம் அவருக்கே தெரிகிறது.
இருந்தாலும் தடத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும் போது அதை வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
எழுது கதைச்சுருக்கம் எழுது.
ஆனால் அதையும் சத்தே இல்லாமல் எழுதிவிட்டார்.
பார்ப்போம் அடுத்த ஐந்து வருடங்களுக்குள்ளாவது “விமலாதித்த மாமல்லன் அவர்கள்” ஃபேஸ்புக்கில் ஆரம்ப கட்டத்தில் எழுதும் ஒரு புதிய ஃபேஸ்புக் பதிவரை விட கிரியேட்டிவிட்டியாக எழுதுகிறாரா இல்லையா என்று பார்ப்போம்.
அவர் மனதில் நல்ல கிரியேட்டிவிட்டி ஊற்றெடுக்கட்டும்.

No comments:

Post a Comment