Friday 5 June 2015

பிரபஞ்சன் எழுதிய 'முட்டை'

பிரபஞ்சன் எழுதிய முட்டை (1981 ?) என்னும் நாடகத்தைப் படித்தேன்.இதை ஞானியின் பரீக்‌ஷா குழுவினர் நாடகமாக நடித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

ஒரு தாத்தா முட்டை கொண்டு வருகிறார்.

அதை எதிரே வந்த இளைஞன் தன் சைக்கிளால் இடித்து பத்து இருபது முட்டைகளை உடைத்து விடுகிறான்.

தாத்தா இளைஞனிடம் விவாதம் செய்து உடைந்த முட்டைக்கான காசைக் கேட்கிறார்.அவனும் கொஞ்ச நேரம் விவாதம் செய்து காசைக் கொடுக்கலாம் என்ற மனநிலையில் பேசிக்கொண்டிருக்கும் போது,
சுற்றியிருக்கும் பொதுஜனங்கள் அதை பெரிய சண்டையாக்க முயற்சி செய்கிறார்கள்.

ஆனால பெரியவரும் இளைஞனும் சண்டை போடாமல் இருக்க ஏமாற்றம் அடைகிறார்கள்.

அப்போது அங்கே அதிகாரி வருகிறார்.அவர் விசாரிக்கிறார்.
தாத்தாவுக்கு ஒரு இளம் மனைவி இருப்பதை அறிந்து கொண்டு,
தாத்தாவை எப்படியாவது பிடித்து வைக்க வேண்டுமென்று,

“இந்த இளைஞன்தான் இந்த முட்டையை உடைத்தான் என்பதற்கு என்ன சாட்சி, ஏன் அவன் மேல் தேவையில்லாமல் குற்றம் சாட்டுகிறாய்? என்று தாத்தாவைப் பிடித்து வைத்து இளைஞனை விடுதலை செய்கிறார்.

சும்மா விடுதலை செய்ய வில்லை அவனிடம் “உன்னை விடுவிக்கிறேன் ஒடிப்போ.ஆனால் காசைக் கொடுத்து விடு” என்று கறந்துவிட்டுதான் அனுப்புகிறார்.

தாத்தா அழுதபடி அதிகாரியின் கஸ்டடியில் இருக்கிறார்.இப்போது அதிகாரியின் அதிகாரி துரை வருகிறார்.துரையிடம் தாத்தா முறையிடுகிறார்.
துரை வெகு நேரம் யோசித்து

“இது உன் கோழிவிட்ட முட்டைதானா? அல்லது பக்கத்து வீட்டுக் கோழி இட்ட முட்டையை திருடி வைத்திருக்கிறாயா? நீ திருட வில்லை என்பதை நிருபித்து விட்டு போகலாம்.அல்லது சிறையில் இரு” சிறை வைக்கிறார்.

அவர்களுடைய குறிக்கோள் எப்படியாவது பெரியவரின் இளம் மனைவியை வரவைப்பதுதான்.அது மாதிரியே பெரியவரின் மனைவி வருகிறாள்.
அதோடு நாடக்ம் முடிகிறது.

இதை இவ்வளவு சுருக்கமாக எழுதுவது தவறான விஷயம். ஆனால்”முட்டை” இன்னும் பலரை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்படி எழுதுகிறேன்.

இதில் பிரபஞ்சன் இந்த பொதுமக்கள் பேசும் இடங்களில் எல்லாம் சிக்ஸ்ர் அடிக்கிறார்.

அவ்வளவு சுவாரஸ்யமாக, “ஆமா இல்ல இப்படித்தான் பேசுவோம் இல்ல” என்று நாம் வியப்பது மாதிரி அப்படியே எழுதியிருப்பார்.

தாத்தாவுக்கும் இளைஞனுக்கு இடையே சண்டை வரும் போது ஒருவர் “எங்களுக்கு சண்டை வேண்டும்” என்கிறான்.

அதை இன்னும் பலரும் ஆமோதிக்கின்றனர்.அப்போது ஒருவன் சண்டையில் சேவல் சண்டை நன்றாயிருக்கும் என்கிறான்.தான் ஒரு சேவல் சண்டை பார்த்தாகச் சொல்லி அதை நுணுக்கமாக விவரிக்கிறான்.

சண்டையில் தோற்ற சேவலின் சொந்தக்காரர் தன் நடுவிரலையும் ஆட்காட்டி விரலை வைத்து கத்திரி மாதிரி துவண்டு கிடக்கும் சேவலின் கழுத்தை நறுக்கி நசுக்கிக் கொன்றதாக சொல்கிறான்.

இந்தபொது ஜனங்களின் வீண்பேச்சுக்களை நிறுத்துமாறு ஒரு பெண் குரல் கேட்கிறது. உடனே வெறும் பெண். பொட்டைச்சி என்பது மாதிரி இகழ்ச்சியாக பொதுமக்கள் பேசுகிறார்கள்.

துரை இல்லாத போது அவரைப் பற்றி இகழ்ச்சியாகவும் அவர் வரும் போது பவ்யமாக பணிவது போன்றவற்றை பிரபஞ்சன் அழகாக எழுதியிருக்கிறார்.
பெரியவருக்கு அழகான இளம் மனைவி இருக்கிறாள் எனத் தெரிந்ததும் பாதுகாவலர்கள் பேசும் கீழ்தரமான பாலியல் கிண்டலை பிரபஞ்சன் துல்லியமாக வடித்துள்ளார்.

இந்த முட்டை நாடகத்தை வாசித்து முடிக்கும் போது இந்தக் காலத்திலும் இது மாதிரி யதார்த்த நாடங்கள் நிறைய வரவேண்டும் என்று தோன்றுகிறது.
நாட்டில் எவ்வளவோ அரசியல் பிரச்சனை இருக்கிறது.

அதையெல்லாம் பகடி செய்து இது மாதிரி கொஞ்சம் அர்த்தமான நாடகங்கள் நிறைய வரவேண்டும்.

No comments:

Post a Comment