Thursday 3 July 2014

ஜெமோ எஸ்.ரா சாரு உயிர்மைக்கு வந்த கதை...


எனக்கு தெரிந்த அரசியலை சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.கூடுதல் குறை இருக்கலாம்.

-தான் ஒரு கேளிக்கை எழுத்தாளர் என்று மக்கள் தன்னை அடையாளம் காட்டுவது கண்டு,அதை மாற்றலாம் என்ற எண்ணத்தில் சுஜாதா தன்னை ஒரு தீவிர இலக்கிய பத்திரிக்கையோடு அடையாளப்படுத்திக்கொள்ள நினைக்கிறார்.

கணையாழியில் எழுதினாலும் கூட அவருக்கு திருப்தியில்லை.சுந்தர ராமசாமியின் காலச்சுவடு குழுமத்தில் இணைய முயற்சி செய்கிறார்.

சுந்தர ராமசாமி அதை அனுமதிக்கவில்லை.சுஜாதாவுக்கு அது வருத்தும்.தன்னுடைய கட்டுரையொன்றில் நாகர்கோவிலைக் கடக்கும் போது சு.ரா வீட்டுக்கு போகலாமா வேண்டாமா என்று யோசித்தேன் என்று சொல்கிறார்.அவர் விளையாட்டாய் அதைச் சொன்னால் கூட அவருடைய வருத்தமாக அதை புரிந்து கொள்ளலாம்.

-மனுஷ்யபுத்திரன் காலச்சுவடில் சு.ராவின் சீடனாக சேர்ந்து,அப்புறம் கண்ணனின் நண்பனாக ஆகிறார்.(உயிர்மை குழுமத்தார் இதை கண்ணன் மனுஷ்யபுத்திரனுடைய நண்பனார் என்று வாசித்துக் கொள்ளவும்).அவர்கள் இருவரும் இணைந்து காலச்சுவட்டை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துப் போய் வளர்க்கிறார்கள்.

-மனுஷ்யபுத்திரனுக்கும்,கண்ணனுக்கும் சின்ன மனவேறுபாடுகள் வர, மனுஷ்யபுத்திரன் நீதியை எதிர்பார்த்து சு.ராவிடம் கதற,சு.ராவோ மவுனமாக இருக்கிறார்.

இதனால் மேலும் மனுஷ்யபுத்திரன் மனக்கஷ்டப்பட்டு காலச்சுவடை விட்டு வெளியேறுகிறார்.( இது மனுஷ்யபுத்திரன் ஒரு பேட்டியில் சொல்கிறார்.கண்ணன் பார்வையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை)

- ஏற்கனவே சு.ராவால் நிராகரிக்கப்பட்ட சுஜாதாவும்,லேட்டஸ்டாக வெளியேறிய மனுஷ்யபுத்திரனும் இணைகிறார்கள்.”இவங்க எப்பவுமே இப்படித்தாண்டே.வாடே நாம புதுசா ஆரம்பிக்கலாம் என்று சொல்லி உயிர்மை இலக்கிய இதழ் வருகிறது.

சுஜாதா கூட மேற்கத்திய இசை பற்றி வெகு சுமாரான கட்டுரைகள் எல்லாம் எழுதுகிறார்.

-உயிர்மை குழுமத்தின் முக்கிய தளபதிகளாக மனுஷ்யபுத்திரன் முதலில் வைத்திருந்தது எஸ்.ராமகிருஷ்ணன்,சாரு நிவேதிதா,மற்றும் ஜெயமோகன்.

-எஸ்.ராமகிருஷ்ணன் யாரிடமும் மோதலுக்கு போகாத புத்தன் புத்தியை கொண்டவரானாலும்,அவருக்கான வெளியை காலச்சுவடு கொடுக்கவில்லை என்று நினைக்கிறார்.

தான் ஒரு குழுமத்தின் முக்கிய தளபதியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்.அதனால் உயிர்மையின் முதல் தளபதி பொறுப்பை ஏற்கிறார்.ஒ.பன்னீர்செல்வம் அம்மாவுக்கு பணிவாக இருப்பது போல இவர் உயிர்மைக்கு காலம் முழுவதும் பணிவாக இருப்பார் என்பதை உறுதியாக சொல்லலாம்.இவரை பெரிய ஆரட்டராக ( orator) உயர்த்திய பெருமை மனுஷ்யபுத்திரனைச் சாரும்.

-சாரு நிவேதிதா.இவர் ஜே.ஜே சில குறிப்புகளை நெக்கு வாங்க அடி அடியென்று அடிக்க ( மேம்போக்காததான்) அதனால் அவருக்கும் காலச்சுவடுக்கும் எப்போதும் ஆகாது.

ஆனாலும் சாரு சு.ராவுக்கு எடுபுடி வேலையெல்லாம் செய்து அங்கே இணைய முயற்சி செய்கிறார்தான்.அவரை கண்டுகொள்ளவில்லை.

ஒருமுறை காலச்சுவடு “தமிழ் இனி” விழா நடக்கும் போது சாருவே போன் போட்டு கேட்கிறார்

“என்னைக் கூப்பிடவில்லையா? “ என்று.

அதற்கு தமிழ் இனி” குழுவினர் “ஸ்பானிஷ் இனி” விழா நடந்தால் கூப்பிடுகிறோம் என்றார்களாம் (இது என் பகடி இல்லை.உண்மை).

இப்படியெல்லாம் பேசினால் தன்மானன் சாரு எப்படி தாங்குவார்.அதனால் அவர் திகைத்து “என்னடா செய்றது ஏழுமலை” என்றிருக்கும் போது,

மனுஷ்யபுத்திரன் “வாங்க பழகலாம் சாரு! நான் ஒரு இலக்கிய பத்திரிக்கை வெச்சிருக்கேன்.அங்க எழுதுங்க.பயங்கரம்,உலகத்தரம் என்றெல்லாம் போட்டு எழுதுங்க” என்கிறார்.

விளைவு சாரு மனுஷ்யபுத்திரனை உலகக்கவிஞர் என்கிறார்.ஒரு மரம் பின்வாசல் வழியே நடந்து வந்து காபி குடிச்சியா என்று கேட்ட கவிதையை அதற்கு உதாரணம் சொல்வார் தலைவர் சாரு.

இப்படி உயிர்மையின் முக்கிய அடியாளாக சாரு விளங்க ஆரம்பித்தார்.அருந்ததிராய் தன் புத்தகத்தை உயிர்மை மொழிபெயர்ப்புக்கு கொடுக்கும் போது அவரை புகழ்ந்தும்.அது பிறகு காலச்சுவடுக்கு போன பிறகு “அருந்ததி ராய் அற்ப பதர்.கள்ளக் காப்பி” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.

-ஜெயமோகன் கதையைப் பார்ப்போம்.

ஜெயமோகன் சு.ராவின் சிஷ்யர்.அவர் எப்படி வெளியே வந்தார்.சு.ராவுடன் பகுத்தறிவு கொள்கையைக் கற்ற ஜெயமோகன்,

அதைத்தாண்டியும் உலகம் உள்ளது என்று நம்பினார்.

அப்படியே நித்ய சைத்ன்ய யதி (ஸ்பெல்லிங் கரெக்டா) மேல் பக்தி கொண்டார்.

அவரைப்பற்றி சு.ராவிடம் தொடர்ந்து பேசுகிறார்.சு.ராவுக்கு அதில் பிடிப்பில்லை.ஆனால் ஜெ.மோ விடவில்லை.

காலச்சுவடில் அது பற்றிய ஒரு கட்டுரைய எழுத முயற்சி செய்கிறார்.கட்டுரை நீளமாக போகிறது.கண்ணன் கட்டுரை நீளம்,குறைத்துத் தாருங்கள் என்று கேட்க,

ஜெயமோகன் “எவ்வளவு அதிகமாக கட்டுரை வருகிறதோ,அவ்வளவு பக்கங்கள் அதிகப்படுத்துங்கள்.அதற்குள்ள காசை நான் தருகிறேன்” என்றார்.

அவ்வளவு பாசம் சாமியார் மேல்.

ஆனால் கண்ணன் “நாங்க இதழ் நடத்துறோமா ?அல்லது Dtp சர்வீஸ் நடத்துறோமா” என்று சூடாக கேட்க,

ஜெயமோகன் தான் பிரியும் வேளை வந்து விட்டதாக நினைக்கிறார்.

சோகத்துடன் பிரிந்து வெளியே வருகிறார்.வந்தது மனுஷ்ய புத்திரன் “வாங்க பழகலாம்” என்கிறார் புன்னகையோடு.

-இதுவே ஜெயமோகன்,சாருநிவேதிதா,மற்றும் எஸ்.ரா உயிர்மைக்கு வந்த கதை

:) :)

No comments:

Post a Comment