Thursday 3 July 2014

பேச்சு சிதைத்த குறிக்கோள்கள்...

ஒரு கதை எழுதிட்டிருக்கேன்.

ஒரு புத்தகம் கொண்டு வரலாம்ன்னு இருக்கேன்.

வேலை செய்துகிட்டே அப்படியே சைடு ஒரு கன்சல்டன்சி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

ஃபாரின் டிரை பண்ணிட்டுதான் இருக்கேன்.சீக்கிரம் கிளம்பிடுவேன்.

இப்படி "சாதனை" அல்லது "செயல்" செய்யும் முயற்சியை அடுத்தவரிடம் சொல்வதிலேயே அந்த சாதனையையோ அல்லது செயலையோ செய்துவிட்ட உணர்வை நம்மில் பலர் அடைந்து விடுகிறோம்.

சில சமயம் இப்படி சொல்லித்திரிவதின் மூலம் நம் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்கிறோம்.

நான் பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் போது என்னைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.ஏனென்றால் எனக்குதான் கட் ஆஃப்,எண்டிரன்ஸ் எக்ஸாம்,கவுன்சிலிங், பிரபல காலேஜ்கள் எல்லாம் தெரியும்.காரணம் என் அண்ணன்கள் பொறியலும் மருத்துவமும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடமிருந்து நான் பெற்ற தகவல்களை அடித்து விட்டுக்கொண்டிருப்பேன்.எல்லோரும் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

அதனாலேயே எனக்கு ஒரு மதிப்பு இருந்தது.என்னுடைய முயற்சிகளை சொல்வதாலேயே சாதனையை அடைந்துவிடுவேன் என்ற குருட்டு நம்பிக்கையை என் மனம் பெற்றிருந்திருக்கக் கூடும்.

கடைசியில் எக்சாம் ரிசல்ட் வந்து என்னைத்தவிர அனைவரும் என்ஜியனியரிங் காலேஜ் சேர்ந்தார்கள்.

நான் மட்டும் டிப்ளமா சேர்ந்தேன்.பள்ளி பருவத்தில் அடித்த சவுடால்களை எண்ணி எண்ணிரொம்ப நாள் சோர்ந்திருக்கிறேன்.

இதைத்தான் சொல்கிறேன் நான் செய்யும் முயற்சியை தேவையில்லாமல் டமாரம் அடித்தல் தேவையில்லாத செயல்.

சரி.எப்போது இது மாதிரி முயற்சிகளை சொல்லலாம்.

-ஒரு தூண்டுதலுக்காக சொல்லலாம்.அதுவும் நம்முடைய உண்மையான வெல் விசரிடம் மட்டுமே சொல்ல வேண்டும்.அப்படி சொல்லும் பட்சத்தில் நமக்கு ஒரு தூண்டுதலாக,பாசிட்டிவ் எனர்ஜியாக இருக்கும் பட்சத்தில். ஒரு பெஞ்ச் மார்க்கை முடித்து அதுபற்றி பேசினால் இன்னும் மனம் உற்சாகமடையும் என்கிற பட்சத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

-அதை பொதுவில் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் பலர் உதவ முன்வந்தால் பகிர்ந்து கொள்ளலாம். “நான் இது பற்றி ஆராய்ச்சி செய்யப் போகிறேன்" என்று சொல்லும் போது பலர் உதவ முன்வரும் போது முயற்சிகளை சொல்லலாம்

-விளம்பரம் கிடைக்கும் போது அதைச் சொல்லலாம்.எதிர்பார்ப்பை உருவாக்குவதற்கு இந்த டமாரத்தை பயன்படுத்தலாம்.

இந்த காரணத்தை தவிர சும்மா பிறரை அசத்துவதற்காக அல்லது கடுப்பேத்துவதற்காக அல்லது சிறிய சந்தோசத்திற்காக எல்லாம் டமாரம் போடத் தொடங்கினால் நீங்கள் தவறான பாதையை நோக்கி பயணம் செய்கிறீர்கள் என்று பொருள்.

நிச்சயமாக சொல்லமுடிகிறது என்பதால் இதை நிச்சயமாக சொல்கிறேன்... 

2 comments:

  1. //சொல்லித்திரிவதின் மூலம் நம் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்கிறோம்.// - நானும் உணர்ந்திருக்கிறேன்...

    ReplyDelete