Monday 22 July 2013

Terry Jones Fairy tales

குழந்தைகளுக்கான இலக்கியம் பற்றியது...

டெர்ரி ஜோன்ஸ் ஃபேரி டேல்ஸ் (Terry Jones Fairy  tales) என்பது டெர்ரி ஜோன்ஸ் என்பவரால் 1981 இல் எழுதப்பட்ட குழந்தைகளுக்கான கதைகள் ஆகும்.

இந்த நூற்றாண்டின் குழந்தையிலக்கியத்தின் சிறந்த ஐந்துபடைப்புகளில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

எல்லாமே சிம்பினான கதைகள்தான்.சில கதைகளுக்கு முடிவே கிடையாது.ஆனால் சுவாரஸ்யமானது.அதிலிருந்து சாம்பிளுக்கு ஐந்து கதைகள்.என்னுடைய பாணியில் சுருக்கி எழுதியிருக்கிறேன்.

கதை ஒன்று -கார்ன் டாலி (Corn dolly)

விவசாயி சோளத்தை அறுவடை செய்யும் போது அழுகைசத்தம் கேட்டது.யார் அழுவது என்று பார்த்தால் வயலில் நிற்கும் “சோளக்காட்டு பொம்மை” தான் அது.

’ஏன் அழுகிறாய்’ என்று விவசாயி பொம்மையை கேட்க,’அறுவடை முடித்து என்னை தனியாக விட்ட் விடுகிறீர்கள் எனக்கு பயமாய் இருக்கிறது’ என்று பொம்மை அழுதது.

சரி வா என்று வெளியே இருக்கும் வைக்கோல் கொட்டகையில் பொம்மையை வைத்தார்.

”பாத்தீங்களா நீங்க மட்டும் கல்லுவீடு நான் வைக்கோல் வீடா “ என்று பொம்மை சொன்னது.சரி என்று விவசாயி அவர் வீட்டுக்கே கூட்டிப்போனார்.

வீட்டுக்கு போனதும் பொம்மை இன்னும் பல குறைகளை சொன்னது.விவசாயியும்  பொம்மைக்காக எல்லாவற்றையும் செய்தார்.

அவர் உணவையே கூட கொடுத்தார்.

நல்ல இருக்கை கொடுத்தார்.கடைசியாக சொன்னது விவசாயிடம் “நீ மட்டும் குளிருக்கு நெருப்பில் குளிர்காய்கிறாய் என்னை டீலில் விட்டுவிட்டாய் “என்று சொல்ல சோளக்காட்டு பொம்மையை நெருப்பின் பக்கத்தில் விவசாயி வைக்க, பொம்மை தீப்பிடித்து எரிந்து போகிறது.


கதை இரண்டு- கேக் ஹார்ஸ் (Cake horse)

ஒரு மனிதன் சிறிய குதிரை உருவத்தில் ஒரு கேக்கை செய்து வைத்துவிட்டு தூங்கிவிட்டான்.

தூங்கும் போது ஒரு புனித நட்சத்திரத்தின் ஒளியால் அந்த கேக் குதிரை உயிர்பெற்றது.

இங்கும் அங்கும் தாவித்தாவி ஒடியது.தன்னை செய்த மனிதனிடம் “வா என் மேல் ஏறிக்கொள் “நான் உன்னை சுமக்கிறேன் என்றது.

அதைப் பார்த்து மனிதன் சிரித்து” உன்னால் முடியாது.நீ கேக்கால் செய்யப் பட்ட குதிரை.மேலும் உனக்கு சேணையும் லாடமும் இருந்தால் மட்டுமே ஒட முடியும் என்று சொல்ல, குதிரை ஊர் தச்சனிடம் கேட்க, அவன் கேக் குதிரையிடம் பணம் இல்லாததால் மறுத்து விடுகிறான்.உடனே கேக் குதிரை கடுப்பாகி நாட்டை விட்டு ஒடி காட்டுகுதிரைகளோடு சேர்ந்து கொண்டது. ஆனால் காட்டுகுதிரைகள் வலிமை முன்னால் கேக் குதிரையினால் நிற்க முடியவில்லை.

சோகத்தோடு அலைந்து கொண்டிருந்து. அப்போத் அங்கே ஒரு எலி உடல் மெலிந்து சோகமாய் இருந்தது. கேக் குதிரை எலியை விசாரிக்க,எலி தன் கிராமத்தை விட்டு தொலை தூரம் இங்கே மாட்டி கொண்டதாக சொன்னது.

எலியின் பசியைப் பார்த்த கேக் குதிரை “நீ கவலைபடாதே என்னை கொஞ்சம் சாப்பிட்டுக்கொள் என்றது. எலியும் கொஞ்சூண்டு குதிரையின் வாலை தின்று பசி ஆறியது.

பின் எலியே அதால் முடிந்த அளவுக்கு சேணையும் லாடமும் குதிரைக்கு செய்து கொடுத்தது.

பின் எலி குதிரையை ஒட்ட எலியின் ஊருக்கே சென்று எலியும் கேக் குதிரையும் மகிழ்ச்சியாக இருந்தன.



கதை மூன்று - மூன்று மழைத்துளிகள் (Three rain drops)

மூன்று மழைத்துளிகள் வானத்தில் இருந்து வந்து கொண்டிருந்தன.

அதில் முதல் மழைத்துளி நம்மூவரி நானே சிறந்தவன்.காரணம் நான் பெரிய உருவமாய் இருக்கிறேன் என்றது.

இரண்டாம் மழைத்துளி நானே சிறந்தவன்.காரணம் நான் மூவரில் அழகானவன் என்றது.

மூன்றாவது மழைத்துளி .இல்லை நானே தூய்மையானவன்.அதானால் நானே சிறந்தவன் என்றது.

இம்மூன்று மழைத்துளிகளும் முடிவில் தரை ஒரு அழுக்குகுட்டையில் விழுந்து சிதறி அழுக்குநீராகிவிட்டன.


கதை நான்கு - ஊதாப் பழம் (Purple fruit)

ஒரு கடல் பிரயாணியின் கப்பல் உடைந்து ஆளில்லாத தீவில் மாட்டிக்கொள்கிறான்.அங்கே மிக உயரமான ஒரு மரத்தில் ஊதா நிறப் பழங்களை பார்க்கிறான்.மிகுந்த சிரமங்களிடையே அந்தப் பழத்தை பறித்து சாப்பிடுகிறான்.

சாப்பிட்ட உடன் தூங்கிவிடுகிறான்.அவன் கனவில் அவனை கப்பல் ஒன்று வந்து கூட்டிச்செல்கிறது. ஊரில் மனைவி குழந்தைகளை பார்க்கிறான்.பணக்காரனாகி விடுகிறான்.எல்லாம் கனவில்தான். இப்படியே கனவு கண்டு கண்டு அவனுக்கு அதுவே பிடித்து விடுகிறது.யாரைப் பற்றியும் கவலையில்லாமல் ஊதாப் பழங்களை சாப்பிட்டு தூங்கிகொண்டே இருக்கிறான்.

முடிவில் அந்த தீவுக்கு வந்து இன்னொரு கப்பல் பயணிகள் இவனை தூக்கி மனைவியிடம் சேர்க்கிறார்கள்.இவனோ எனக்கு ஊதாப் பழம் வேண்டும் என்று அழுகிறான்.

இவன் மனைவி “நீங்கள் கனவில் நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதைத்தான் பார்த்தீர்கள்.நாங்கள் இங்கு அழுதுகொண்டிருப்பதை பார்த்தீர்களா” என்றார்.

அதைக் கேட்டு நெகிழ்ந்த அந்த பயணி ஊதாப் பழத்தை மறந்து மனைவி குழந்தையோடு உறவாடுகிறான்.


கதை ஐந்து - தூரத்து கோட்டை அல்லது தூரக்கோட்டை (Far away castle)

ஊருக்கு புதிதாய் வரும் வழிப்போக்கன், ஊரின் பக்கத்தில் இருக்கும் ஒரு கோட்டையை பார்க்கிறான்.அந்த கோட்டையின் பெயர் என்ன என்று ஊராரிடம் கேட்கிறான்” அது பேரு ’தூரக்கோட்டை’ என்கிறார்கள்.மேலும் அந்த கோட்டையை அடையவே முடியாது என்கிறார்கள்.

வழிப்போக்கன் அதை சவாலாய் எடுத்து கோட்டையை நோக்கி நடக்கிறான்.

ஆனால் இவன் நடக்க நடக்க கோட்டை இவனை விட்டு தள்ளிப் போய் கொண்டே இருந்தது.

ரோட்டை விட்டு குறுக்கே காட்டுவழி நடக்கிறான் காடு முடிந்ததும் கோட்டை வந்து விடும் என்று நம்புகிறான். கோட்டையும் பக்கத்தில் வருவது மாதிரி இருந்தது. ஆனால் காடு முடிந்ததும் பார்த்தால் கோட்டை பெரிய மலை உச்சிக்கு போனது.

வழிப்போக்கன் மலைநோக்கி நடக்க நடக்க அவனால் முடியவில்லை.களைப்பில் மயங்கி விழுகிறான்.அப்போது அங்கு வந்த மாயக்கிழவி “எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன்” என்று விட்டுவிடு என்கிறாள்.

 இவனோ இல்லை நான் கோட்டையை அடைந்தே தீருவேன் என்று போகிறான்.முடிவில் அவனால் முடியவில்லை.”கடவுளே  என்னால் முடியவில்லை எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன்” என்று புலம்புகிறான்.

அப்போது அவன் கோட்டை வாசலுக்கு வந்து விடுகிறான்.

கிழவியும் கோட்டை வாசலில் இருந்து  “நான்தான் சொன்னேனே எல்லாவற்றையும் விட்டால் நீ கேட்டது கிடைக்கும் என்று” கோட்டையின் வாசலை திறந்து விட்டாள்.

No comments:

Post a Comment