Tuesday 16 July 2013

அடிப்படைவாதத்தின் வளர்ச்சி

1.ஒரு நாட்டில், அல்லது மாநிலத்தில், அல்லது குறிப்பிட்ட ஏரியாவில் “எக்ஸ்” என்ற பெரும்பான்மை மதத்தவர் அல்லது ஜாதியினர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.அவர்களை தூண்டி ஒட்டுக்களை பெற்றுவிடுவது அடிப்படைவாத கட்சிகளின் குணம்.

உதாரணம் ஒன்று... 

- அயோத்திப் பிரச்சனையில் ரதயாத்திரை மேற்கொண்டு மொத்த இந்தியாவையுமே தேவையில்லாமல் பதட்டப்படுத்தி ( தெரியுமா இதுக்கு திருவனந்தபுரத்தில் பந்த் நடந்தது.) உத்திரபிரதேச அப்பாவி இந்துக்களின் ஒட்டை அள்ளிய பா.ஜ.கவின் தந்திரம்.

உதாரணம் இரண்டு...

வன்னியர்களிடத்து ஒரு அலையை ஏற்படுத்தி அவர்கள் ஒட்டை கவர்ந்த பா.ம.க

2.இப்போது அந்தக் கட்சிகள் பிரபலமாகிவிட்டது.இனிமேல் அவர்கள் “வொய்” என்ற சிறுபான்மையினரை குறிவைப்பார்கள்.அப்படியே அவர்கள் நல்லவர்கள் மாதிரியும்.சிறுபான்மையினரை வெறுக்காதவர்கள் மாதிரியும் காட்டிக்கொள்வார்கள். அது எதற்கென்றால் அந்த “வொய்” ஒட்டையும் பெறத்தான்.

உதாரணம் ஒன்று...

-ஹஜ் பயணிகளுக்கு பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் சில சலுகைகள் கொடுத்தார்கள்.முக்தார் அப்பாஸுக்கு மினிஸ்டர் பதவி கொடுத்தார்கள்.இன்னும் பல ஸீன்கள்.

உதாரணம் இரண்டு...

-ராமதாஸ் திடீரென்று தலித்துகளிடம் பாசமாக இருந்தார்.திருமாவளவனிடம் நட்பு கொண்டார். திருமாவிடம் இருந்து “தமிழ்குடிதாங்கி” என்ற விருதை பெற்று அதை பார்த்து ரசித்துக்கொண்டே தன் பண்ணை வீட்டில் விளைவிக்கப்பட்ட இயற்கை உர கத்திரிக்காய்களை வறுத்து தின்றார்.

3.சரி.அடிப்படை வாதத்தினால் “எக்ஸ்” பெரும்பான்மையினரின் ஒட்டு வந்தாச்சு.சலுகைகளால் “வொய்” சிறுபான்மையை கவர்ந்தாயிற்று. இந்த நடுநிலைமை வாதிகள் என்று ஒரு கோஸ்டி இருக்கினறனரே! அவுங்கள எப்படி கவர்வது.அதுக்கும் திட்டம் இருக்கு நம்ம அடிப்படைவாத கட்சிகள் கிட்ட.இல்லாம போன என்ன அரசியல் அது.

உதாரணம் ஒன்று...

-பா.ஜ.கவின் அணுகுண்டு பரிசோதனை( அவனவன் இந்திய தேசப்பற்றுல வெறியானான்),வாஜ்பாயின் ஹிந்தி கவிதைகள்,அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது, இந்தியா ஒளிர்கிறது என்ற கோசங்கள்.

உதாரணம் இரண்டு...

-பா.ம.கவின் தமிழ் வெறி. சிகரெட் மதுவுக்கு எதிரான ஸீன்கள்.ஈழ ஆதரவு போராட்டங்கள், ராமதாஸின் பண்ணைவீட்டுப் படங்களை ஆனந்த விகடனில் போடுதல்,பசுமைதாயகம் போன்ற பற்பல யுத்திகள்.

4.இப்போது மூன்று வகையான ஒட்டுக்களையும் பெற்று அந்த அடிப்படைவாதக் கட்சி ஒரு ஸ்திர நிலைமைக்கு வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.இப்போது “என்ஸ்” பெரும்பான்மை அடிப்படைவாதிகள் முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார்கள்.பல புதிய அடிப்படைவாதக் கட்சிகள் வரத்தொடங்கும்.

உதாரணம் ஒன்று...

- விஸ்வ ஹிந்து பரிசித், ஆர்.எஸ். எஸ் பகிரஙக்மாக பா.ஜ.கவின் போக்கை அடிக்கடி விமர்சிக்கும் பாங்கு. “நீ இந்துவுக்கு மட்டும்தான் சப்போர் செய்யனும்” என்று பா.ஜ.கவை மிரட்டும் ஸ்டைல்.

உதாரணம் இரண்டு...

-வன்னியர்களுக்கென்று பல புதிய அமைப்புகள் தோண்றுவது.அவைகள் பா.ம.கவை விட அதிகமான அடிப்படை வாதத்தை பேச ஆரம்பித்தது.

5.இப்போது பெரும்பான்மையானவர்களின் ஒட்டுக்கள் மிஸ்ஸாகும்.நடுநிலைமையாளர்கள் எப்போதுமே அடிப்படைவாதக் கட்சிகளை நம்புவதில்லை.பல சமயம் கைவிட்டு விடுவார்கள்.அடிப்படைவாதக் கட்சிகள் தோற்று விடுகின்றன.இப்போ அடிப்படைவாதக் கட்சிகள் தங்கள் செயற்குழுவை கூட்டுகின்றன.அங்கே விவாதிக்கிறார்கள்.ஒருவர் சொல்கிறார்.

“யண்ணே நம்ம பலமே நம்ம மதக்காரங்கதான். நம்ம ஜாதிக்காரங்கதான். நாம சிறுபான்மை ஒட்டுக்கும்,நடுநிலைமைவாதிகள் ஒட்டுக்கும் ஆசப்பட்டு, நம்ம கட்சியோட மெயின் தூண்களையே மறந்துட்டோம்னே.மறுபடியும் கட்சிய வளக்கனுன்ம்னா நாம பழைய ஆயுத்தத்தை எடுக்கனும். கண்டிப்பா மறுபடியும் வெறியத்தூண்டனும்.

உதாரணம் ஒன்று...

-பா.ஜ.க தேர்தல் சமயத்தில் உத்திரபிரதேசத்தில் எழுப்பும் ரதயாத்திரை கோசங்கள்.

உதாரணம் இரண்டு...

-நேற்று வந்த விஜயகாந்த் கூட வளர்கிறார் என்ற பொருமலில் ராமதாஸ் “செண்டு ஜீன்ஸ் போட்டு எங்க வன்னியப்பொண்ணுங்கள ஏமாத்துறானுங்க” என்று அடிப்படைவாதத்தை பேசி வன்னியர்களை தூண்டிவிடுவது, இந்திர விழா கொண்டாடி வன்னிய வெறியை ஒருங்கிணைப்பது.

இதைத்தான் நான் சொல்கிறேன். இது மாதிரி அடிப்படை வாதக் கட்சிகளிடம் கவனமாய் இருங்கள்.

ஒட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் இவர்கள்.சக மனிதர்களை துன்புறுத்துவதைக் கூட.

No comments:

Post a Comment