Tuesday 26 June 2012

வழக்கு எண் பற்றி சாருவுக்கு ஒரு கேள்வி ?

வழக்கு எண் படத்தை சாரு நிவேதிதா “குப்பை” என்று சொல்லி , அப்படி மனதில் பட்ட உண்மையை மறைக்காமல் சொன்னால்தான் தனக்கு தூக்கம் வரும் என்று சொல்லி இருந்தார்.

கொஞ்ச நாள் முன்னர் சாருவின் “எக்ஸைல்” நாவல் ( எனக்கு பிடித்த நாவல்) வந்த போது மாமல்லன் ( இவரும் பிடிக்கும் பாஸ்) அதை முழுதும் படிக்கமுடியவில்லை, உப்பு சப்பில்லாத நாவல் என்று தன் மனதில் உள்ள உண்மையை சொல்லும் போது, சாரு “This is not my cup of Tea" என்று ஒதுங்கி விட வேண்டியதுதானே என்று கேட்டார்.

எனக்கு இரண்டு டவுட் வந்துச்சு . அது என்னன்னா ?

1.மாமல்லனும் மனதில் பட்டதை சொன்னால்தானே அவராலும் நிம்மதியா தூங்க முடியும் சாரு மாதிரி ? :)

2.எக்ஸைலை படிக்காமல் குற்றம் சொன்ன மாமல்லனை போட்டு தாக்கி எழுதிய சாருவின் பன்னிரு ஆழ்வார்களும், அறுபத்தி மூன்று நாயன்மார்களும் ”வழக்கு எண்” படத்தை முழுதும் பார்க்காமல் குற்றம் சொன்ன சாருவை பார்த்து ஒரு கேள்வியும் கேட்காமல் இருப்பது ஏன் ?

பின்குறிப்பு :

””நியாயம் என்பது களிமண் மாதிரி, யாருக்கு பேச்சு திறமை இருக்கிறதோ அவர்கள், ஏற்றால் போல் உருவம் செய்து மற்றவரையும் நம்ப வைத்து விடுவார்கள்””” ---- பாலகுமாரன் :))

No comments:

Post a Comment