Tuesday 26 June 2012

வயதானவரை திட்டலாமா ?

சென்னையில் திருமங்கலம் சிக்னலில் நிற்கிறேன்.நான் நடராஜா சர்வீஸ்தான் எப்பவும்.

எனக்கு கியர் பைக் ஒட்டத்தெரியாது.கிளச்ச புடிக்கனுமாம்,கியர மாத்தனுமாம்,ஹேண்டில பேலண்ஸ் பண்ணனுமாம், பிரேக் பிடிக்கனுமாம்.அதுவும் ஒரே சமயத்துல. அதுக்கு வேற ஆள பாருல.

ஒ.கே.

சிக்னல்ல நின்னனா,என் கூட இரண்டு பெரியவர்களும், ஒரு விடலைபையனும்.ஒரு பெண்ணும் நின்றிருந்தார்கள்.

காரு பஸ்ஸுன்னு சர் சர்ன்னு போய்கினே இருந்தது.

அப்போ ஒரு பெரியவர் முட்டாள்தனமாக சட்டென்று கிராஸ் செய்து விட்டார்.

ஒரு காரிலிருந்து அடிபடாமல் மயிரிழையில் தப்பினார்.

என்னை அறியாமல் பய ஓலமிட்டு விட்டேன்.

என் பக்கம் நின்ற விடலை பையன் கத்தினான்.
“போறான் பாரு ! நாய் நாயி நாயி !

சிக்னலை கடந்து விட்டோம்.

இப்போ மற்றொரு பெரியவர் என்னருகே வந்து.

“ பாத்தீங்களா தம்பி ! ஒரு சின்ன பையன் பெரியவர் அவர பார்த்து நாயின்னு சொல்றான்” என்றார்.

அதற்கு நான் “ ஆமா அவரு நாயிதான சார். ஏழு கழுதை வயசாகுது இன்னும் ரோடு கிராஸ் பண்ணத்தெரியல.மண்டையில அவருக்கு மயிரு மட்டும்தான் நரைச்சிருக்கு , ஆனா அறிவில்ல பன்னி பயலுக்கு!
லூசுப்பய.மண்டைக்கு வழியில்லாம இருக்கான் சார் அவன். அவர் நாயிதான சார். அதில என்ன சந்தேகம் என்றேன்.

பெரியவர் அசந்து என்னை பார்த்து ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.

எனக்கு கோபம் அடங்க வில்லை. வீடு வரும் வரை மனதில் தெரிந்த கெட்ட வார்த்தை அனைத்தும் சொல்லி திட்டி வந்தேன் :)

No comments:

Post a Comment