Tuesday 26 June 2012

சிறுகதையின் கதைச்சுருக்கம்

தினமணிகதிரில் சிறுவயதில் படித்த பாதித்த கதை.

Mr.” கே” என்கிற பேராசியருக்கும் மாணவனுக்கும் இடையே ஆழமான நட்பும் அன்பும் இருக்கிறது.

ஆனால் Mr.” கே” “மறுபிறவி” கான்செப்ட்டை நம்புபவர். மாணவன் பகுத்தறிவாதி.நம்புவதில்லை. பேராசியரை கிண்டல் செய்து கொண்டே இருப்பான். Mr.” கே” மறுபிறவியை பற்றி ஆணித்தரமாக அடித்து பேசிக்கொண்டே இருப்பார்.

ஒருநாள் Mr.” கே” திடீரென் இறந்து போய் விடுகிறார். 

மாணவனால் அந்த பிரிவை தாங்க முடியவில்லை.

அவருடைய அன்பை நினைத்து ஏங்கி கண்ணீர் உகுக்கின்றான்.

ஒருமாதமாக் தன் அறையிலேயே அடைபட்டு கிடக்கிறான்.

பின்னர் மனதை தேற்றி கொண்டு பேராசிரியர் அறைக்கு சென்று அவர் புத்தகத்தை பார்த்து கொண்டிருக்கிறான்.

அப்போது ஒரு கரிய பெரிய சிலந்தி மாணவன் மேல் தாவ, அவன் பயந்து அதனை தட்டி விட்டு காலால் நசுக்குகிறான்.

இப்போது அவன் இடது பக்க மேல் க்ஷெல்பை தற்செயலாக பார்க்க. அதில் ”K" என்கிற எழுத்தையுடைய சிலந்தி வலைபின்னலை பார்த்து திடுக்கிடுகிறான்.

அவசரமாக் தான் மிதித்த சிலந்தியை பார்க்கிறான்.

சிலந்தியின் உறுப்புகளின் துடிப்பு அடங்கி கொண்டிருந்தது.

இந்த கதையை சிறுவயதில் படித்த உடன் துக்கத்தையும்.

கொஞ்ச நாள் பிறகு “கலை கிளூ கிளூப்பையும்” கொடுத்தது :)

No comments:

Post a Comment