Friday 7 August 2015

மலையாளப் படம் மதுர நாறங்கா...

ஜீவனும் சலீமும் மலையாளத்தில் இருந்து ஷார்ஜாவில் டாக்சி டிரைவர்களாக வேலை பார்ப்பவர்கள்.
ஒருநாள் ஜீவன் தாமரை என்ற இலங்கைத் தமிழ்ப்பெண்ணைப் பார்க்கிறான்.
அப்பெண் இலங்கை உன்நாட்டு யுத்ததில் தன் குடும்பத்தை இழந்தவள்.
தாய்மாமனால் ஷார்ஜாவில் இருக்கும் கிளப்புக்கு விற்கப்பட்டு, அங்குள்ள மேனேஜரை தாக்கிவிட்டு ஒடிவந்தவள்.
ஜீவன் பாவப்பட்டு அவளுக்கு ஒருநாள் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறான். பின் அவளையே காதலிக்கிறான். முதலில் சலீம் இதை எதிர்த்தாலும் பின் ஏற்றுக் கொள்கிறான்.
ஜீவனுக்குத் தெரிந்த நண்பனின் கடையில் தாமரை வேலைபார்த்து ரகசியமாக ஜீவன் சலீம் மற்றும் இன்னொரு நண்பனுடம் அவர்கள் வீட்டிலேயே இருக்கிறாள்.
ஒருநாள் ஜீவனுக்கும் அவளுக்கும் இடையே நெருக்கம் வந்துவிடுகிறது.அவள் கர்ப்பமாகிறாள். ஜீவன் தாமரையை திருமணம் செய்து கொள்கிறான்.
பாஸ்போர்ட்டும் இல்லாத விசாவும் இல்லாத தாமரையை வீட்டிலேயே பூட்டி பாதுகாத்து வருகிறார்கள் ஜீவன் மற்றும் அவர்கள் நண்பர்கள். தாமரைக்கு ஒரு டாக்டரை கூட்டி வந்து ரகசியமாக மருத்துவம் பார்க்கிறார்கள்.
ஒருநாள் தாமரைக்கு பிரசவ வலி வரும் போது ஜீவன் தவித்துக் கொண்டிருக்கும் போது வெளியே போலீஸ் வந்து விசாரிக்கிறது. தாமரையும் இருப்பு தெரியக்கூடாது என்று ஜீவன் தாமரையின் பிரசவ வேதனைக் கதறலை கத்த விடாமல் வாய்பொத்தி வைக்கிறான். பின் போலீஸ் போய்விட டாக்டரை அழைத்து வந்து குழந்தை பிறக்கிறது.
குழந்தைக்கு ஒருவயதாக வயதாக இருக்கும் போது ஜீவனுக்கு விபத்து நடக்கிறது. ஜீவனால் பேசமுடியாத படி உணர்வில்லாமல் முகத்தில் கட்டு இருக்கிறது.
கிட்டத்தட்ட மூளைச்சாவு மாதிரி என்று நினைக்கிறார்கள்.
தாமரை வந்து கதறுகிறாள்.
ஜீவனுக்கு கொஞ்சம் சரியானதும்,வீட்டுக்கு வந்து குழந்தையை தூங்கச் செய்து வெளியே சென்று காய்கறி வாங்கப் போகும் போது, போலீஸ் தாமரையிடம் பாஸ்போர்ட் விசா இல்லாத காரணத்தைச் சொல்லி கைது செய்கிறது.
அங்கே தாமரையின் குழந்தை அப்பாவும் அம்மாவும் இல்லாமல் அழுது கொண்டிருக்கிறது.
இதற்கிடையே ஜீவனின் குடும்பத்தார் ஜீவனை உணர்வில்லாத ஜீவனை கேரளா எடுத்துச் செல்கிறார்கள்.அவர்களிடம் ஜீவனுக்கு கல்யாணம் ஆன விசயத்தை தெரிவிக்க சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.
சலீம் குழந்தையை எடுத்துக் கொள்கிறான்.
ஒரு வருடம் பின் ஜீவன் தாமரையைத் தேடத் தொடங்குகிறான். இலங்கைக்கு (கைதான தாமரை இலங்கைக்கு நாடு கடத்தப்படுகிறாள்) சலிமோடு வருகிறான்.
தாமரை இருந்த ஊரில் வீட்டில் அவள் இல்லை.
ஷார்ஜாவில் அநாதை ஆசிரமத்தில் வளரும் அவர்கள் பிள்ளையை தத்தெடுக்க இன்னொரு பெற்றோர்கள் முயற்சி செய்கிறார்கள்.அதை தடுக்க வேண்டுமானால் ஜீவன் தாமரையோடு அங்கே ஆஜராக வேண்டும்.
ஆனால் இங்கே தாமரை இல்லை.
ஜீவனும் சலீமும் சோகத்தோடு இந்தியா திரும்ப் போகும் போது அங்கே ஒரு விபத்தில் அடிப்பட்டப் பெண்ணை அவர்கள் செல்லும் டாக்சியில் தூக்கிப் போட்டு வருகிறார்கள்.
ஜீவனுக்கு ஒருவேளை அவள் தாமரையா என்ற குழப்பம் இருக்கிறது அடிபட்டு ரத்தம் ஒழுகுவதால் அவள் முகத்தை பொத்தி வைத்திருக்கிறார்கள்.பார்க்க முடியவில்லை.
ஜீவனுக்கு அது தாமரையாய் இருக்கும் என்று தோன்றுகிறது
எட்டி எட்டிப் பார்க்கிறான். அப்பெண்ணை தூக்கி ஆஸ்பித்திரிக்கு கொண்டு போகிறார்கள்.
ஜீவனும் சலீமும் பின்னாலே செல்கிறார்கள். ஆனால் அப்பெண் தாமரை அல்ல.
சலீம் ஜீவனிடம் வந்து சொல்கிறான்” இனிமேல் தேடி பிரோஜனமில்லை.நாம் போகலாம்” என்று.
ஜீவன் கண்கலங்கியபடியே அங்கே காட்டுகிறான்.
அங்கே அந்த ஆஸ்பித்திரியில் நர்ஸாக தாமரை நிற்கிறாள்.
ஜீவனைப் பார்த்து அவளும் அழுகிறாள். இருவரும் இணைகிறார்கள்.
தங்கள் மகனை ஷார்ஜா சென்று மீட்கிறார்கள்.
மலையாளத் திரைப்படமான ”மதுர நாறங்கா”வின் கதைதான் நான் மேலே சொன்னது.
கண்கலங்காமல் இப்படத்தை பார்க்கவே முடியாதாம்.

No comments:

Post a Comment