Wednesday 2 January 2013

கதை போல் ஒன்று - 64

ப்ரியாவை மடக்க ரொம்ப கஸ்டபட்டேன்.

வழக்கமான “டைம் என்ன” யுத்தியை கையாண்ட போது பஸ்ஸ்டாப்பில் எல்லோர் முன்னாலும் சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

எல்லோர் கண்களும் என்னை நோக்க அவமானமாகிவிட்டது.

மறுநாள் முதல் வேறு யுத்தி.

ஜெமினியில் இறங்குவாள்.நானும் அங்குதான் இறங்குவேன்.

அவள் ராணி சீதை காம்பவுண்ட் வழியே மவுண்ட் ரோட் செல்வாள்.நான் பின்னாடியே போவேன்.

சரியாக முப்பது மீட்டர் அவளை பின் தொடர்வேன்.
அவள் என்னை பார்க்கிறாளோ இல்லையோ, பின் தொடர்வேன்.

அங்கே ஒரு ஏடிஎம் செண்டர் வர அவளை விட்டு அதில் நுழைந்து விடுவேன்.

அங்கு நூறு ரூபாய் எடுப்பேன்.சில சமயம் மினி ஸ்டேட்மண்ட். சில சமயம் செக் புக் வேண்டுவேன் ஏடிஎம் மிசினிடம்.

இப்படி இரண்டு மாதங்கள் போன பிறகு, மூன்றாவது மாதம் ப்ரியாவிடம் மாற்றம் தெரிந்தது.குறைக்கண் போட்டு பார்க்க ஆரம்பித்தாள்.

நான் அவளை விட்டு பிரியும் போது ஏடிஎம் கண்ணாடி கதவில் அவள் என்னை திரும்பி பார்ப்பது தெரிந்தது.
ஆம் கல் கரைய ஆரம்பித்துவிட்டது.

அதிலிருந்து பஸ்ஸில் அவளைப்பார்த்து சிரிப்பேன்.

பார்ப்பாள் ஆனால் சிரிக்கமாட்டாள்.

ப்ரியா உயரமானவள்.நான் பிளாட்பாரத்தில் நடந்தால், அவள் கிழே நடந்துவந்தால் இருவரும் ஒரே உயரமாய் இருப்போம்.

முகக்களை என்றால் அழுத்தம் திருத்தமான ஒவியம் போல இருப்பாள்.

இப்படியே போனால் எப்போ இவளை பீச்சுக்கு கூட்டிப்போவது, எப்போது முத்தம் கொடுப்பது,

எப்போது எல்லாத்தையும் செய்வது.

தீபாவளிக்கு இரண்டு நாள் முன் சட்டென்று என் மொபைல் நம்பரை பேப்பரில் எழுதி விருவிருவென்று அவளிடம் போய் கொடுத்துவிட்டேன்.

வாங்கிக்க்கொண்டாள்.தீபாவளி அன்று வாழ்த்து சொன்னாள்.

நான் பதில் வாழ்த்து சொல்ல.

”நான் கிறிஸ்டியன்”

“அப்ப பொட்டு வைச்சிருக்க”

“ஆர்.சி சொந்த ஊரு வேளாங்கன்னி”

மறுநாள் நானும் ப்ரியாவும் ஆட்டோவில் ஆபீஸுக்கு போனோம்.ஆபீஸுக்குத்தான் போகவேண்டுமா என்ற யோசனை இருவருக்குமே வர ஸ்பென்சர் பிளாஸாவில் உள்ள ”கப் அன் ஸாஸர்” கடையில் டீ உறிஞ்சி பேசிக்கொண்டிருந்தோம்.

”நீங்க புக்கு படிப்பீங்களா”

ஆமா. சும்மா பஸ்ஸுல பந்தா காட்டுறதுக்கு.

சிரித்தாள்.

நான் பார்த்தேன் அன்னைக்கு நீங்க வாசிச்சிட்டிருந்த புக்கு அட்டைப்படத்த “பசித்த மானிடம்”

ஆமா நல்லாயிருக்கும்.ஹோமோ செக்ஸ்பத்தின புக்கு”

“ஹோமோ செக்ஸ்னா ஜென்சும் ஜென்சும் பண்றதா?

ஆமா”

அது எப்படி பாஸிபிள்.

நான் அவள் கைகளை பிடித்தேன்.இயல்பாய் வைத்திருந்தாள்.கொஞ்சம் மேலே முழங்கை வரை தடவினேன்.

அமைதியாகவே இருந்தாள்.

“ஒருநாள் பீச்சுக்கு போலாமா” என்றேன்.

“அதுக்குத்தான் என்கிட்ட பழகினீங்களா”

“இல்ல அப்படியில்ல.சும்மாதான் கேட்டேன்.ம்ம்ம்..உன்ன பத்தி சொல்லு ப்ரியா”

வேளாங்கண்ணியில இருந்துதான் வரேன்.ஒரே பொண்ணு.அப்பா இல்ல.இங்க சித்தப்பா வீட்ல இருந்து வேலைக்கு போறேன்.
ப்ரைமரி ஸ்கூல்ல டீச்சர்.படிச்சதெல்லாம் இங்குனதான்.சித்தப்பா வீட்லதான்.அப்பப்ப ஊருக்கு போய் அம்மாவ பார்பேன் அவ்ளோதான்.”

”உங்க சித்தப்பா விட்லயே இருக்கியே, உங்க சித்தி கொடும எல்லாம் பண்ணமாட்டாங்களா”

”ச்சே சே அப்படியெல்லாம் இல்ல அவுங்க நல்ல டைப். சித்தப்பா பையன் தான் ஒரு பொடியன் கிடக்கான்.எப்பவும் சண்டைக்கு வருவான்.நானும் சின்ன பிள்ள மாதிரி சண்ட போடுவேன் அவன் கிட்ட”

“ம்ம்ம்..நீ ரொம்ப அழகா இருக்க ப்ரியா.முதல்ல நான் டைம் கேட்கும் போது ஏன் மூஞ்சிய திருப்பிகிட்ட”

“பயமாயிருந்துச்சு அதான்”

கைகளை அவள் கன்னத்தில் ஒரு விநாடி வைத்தேன்.ஒன்றுமே சொல்லவில்லை.சட்டென்று எடுத்துவிட்டேன்.

அன்றிரவு தூங்கவே முடியவில்லை.வாழ்க்கையில் முதன் முதலில் ஒரு பெண்ணின் கன்னங்களை காமத்தோடு தொட்டிருக்கிறேன்.

அதன் இன்பம் இரவு முழுவதும் சுழன்று சுழன்று அடித்தது.

ஏதோ ஒன்றை சாதித்தது மாதிரியான சுகம்.

தினமும் ஃப்ரியாவும் நானும் பேச ஆரம்பித்தோம்.

பாலச்சந்தர் கதாநாயகி மாதிரி எதற்கெடுத்தாலும் சிரிப்பாள்.சத்தாமாக் சிரிப்பாள்.

அவள் அப்பாவின் கால் எப்படி ஃபிராக்சர் ஆனது என்பதை கூட சிரிப்பாய்தான் சொன்னாள்.

கோவப்படவே மாட்டாள்.எல்லாமே வியப்புதான் அவளுக்கு.

அவளிடம் பேசி பேசி தினமும் அவளை அங்கிங்கு தொட்டு தொட்டு இரவு முழுவதும் தூங்காமல் கிடந்தேன்.

ப்ரியாவிடம் பிடித்தது அவள் என்னை லவ் பண்றேன் பண்ணல போன்ற தொல்லைகளை தராமல் இருந்தது.

அந்த டாப்பிக்கையே எடுக்க மாட்டாள்.

ஆனால் காமம் என்னை படுத்த படுத்த முடியவில்லை.

எப்படியாவது பீச்சுக்கு கூட்டிபோய்விட வேண்டும்.
மொபைலில் Send message later என்றொரு ஆப்சன் உண்டு.

அதில் ஐந்து எஸ் எம் எஸ் டைப்செய்தேன்.

“எனக்கு உன் ஞாபகமாகவே இருக்கிறது”

“எனக்கு உன் வயிற்றை முகர்ந்து பார்க்க வேண்டும்”

“சில சமயம் பேசும் போது தெரிக்கும் உன் எச்சில் எனக்கு கொடுக்கும் குளிர்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது”

“பீச்சுக்கு போலாமா ஃப்ளீஸ் ஃப்ளீஸ்”

“ஃப்ளீஸ் ப்ரியா பீச்சுக்கு போலாம்”

இதை முறை இரவு ஒரு மணி, ஒண்ணே முக்கால், இரண்டரை, நான்கு மணி, மற்றும் ஐந்து மணிக்கு போகுமாறு செட் செய்துவிட்டு நிம்மதியாக தூங்கிவிட்டேன்.

காலை சந்திக்கும் போது ப்ரியா கேட்டாள்.
”நைட் முழுசும் தூங்காம எனக்கு மெசேஜ் பண்ணிட்டுருந்தீங்களா”

“ம்ம்ம்”

சிரித்தாள்.நீங்க நல்லவன் மாதிரியே இருக்கீங்க,ஆனா நல்லவன் கிடையாது”

ம்ம்ம்”

மறுபடி சிரித்தாள்.

”நாளைக்கு பீச் போகலாம்”

மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

என்ன செய்வது என்று ஒரே திட்டமிடல்.

கல்லூரிக்காலங்களில் பீச்சுக்கு நண்பர்களோடு ஸீன் பார்ப்பதெற்கென்றே போவோம்.

காதலன் மடியில் காதலியோ, காதலி மடியில் காதலனோ இருந்து முத்தங்கள் பொழிந்து கொள்வார்கள்.காதலன் காதலி மார்பை தடவிக்கிடப்பான்,காதலி சுகத்தில் சொக்கிக்கிடப்பாள்.
பார்க்க பார்க்க உச்சந்தலையில் ஏறும்.

நாளை ப்ரியாவை அணைக்கபோகிறேன்.முத்தமிடப்போகிறேன்.தடவ போகிறேன்.

உள்ளத்தின் ஒரத்தில் எச்சரிக்கை மணியும் அடித்தது

” மாட்டிக்காதடா, லவ், கல்யாணம்ன்னு மாட்டிக்காத”

நானே எனக்கு சமாதானம் சொன்னேன்.

”மாட்டிக்கமாட்டேன் அவ மனசு கஸ்டபடாத மாதிரி எப்படி கழட்டி விடுறதுன்னு எனக்கு தெரியும்”

அண்ணாசமாதி பீச்சும், கண்ணகி சிலை பீச்சும் கூட்டமாய் இருக்கும் என்று நண்பன் சொல்ல, லைட் ஹவுஸ் பீச்சில் நாங்கள்.

கூட்டமே இல்லை.நானும் அவளும் மட்டும் தான்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இருந்தோம்.

தலைக்கு குளித்து முடியை புஸுபுஸுவென்று விட்டிருந்தாள்.

பின்னால் கைபோட்டு அவள் முடிகளை அணைக்க முடியவில்லை.திமிறிக்கொண்டே இருந்தது.

முதல் முத்தத்தை நெற்றியில் ஆரம்பித்தேன்.கண்களை மூடிக்கொண்டாள்.

ஆவேசமாய் இருவரும் முத்தமிட்டு கொண்டோம்.கன்னத்தில் இருந்து உதட்டுக்கு முத்தம் பரவிற்று.

சொக்கி கிடந்தோம் இருவரும்.

முத்தமிட்டு கொண்டே இருக்கும் போதே அவள் மார்பை தொட்டேன்.

சட்டென்று அடி அடித்து விலக்கிவிட்டாள்.மறுபடி தொடப்போனேன்.

”வேண்டாம் வேண்டாம்” என்று மறுத்தாள்.

மீறித்தொட அமைதியாய் இருந்தாள்.

ஒரு மிருகம் மாதிரி இருந்தேன்.

நான் கற்ற கலாச்சாரம், கல்வி, நல்லது, நளினம் எல்லாம் அங்கே உதறப்பட்டது.

அவள் அமைதியாய் இருந்தாள்.

அங்கு இங்கு விழுந்து,அவள் முதுகில் கைவைத்தேன்.நெளிந்தாள்.

ஜிப் வைத்த சுடிதார் போட்டிருந்தாள்.நான் ஜிப்பை அவிழ்க்க போனேன். சட்டென்று எழுந்து திட்டினாள். “நான் போறேன்ப்பா.நீங்க எனக்கு பிடிக்காதத செய்றீங்க”

“இல்ல ப்ரியா செய்யல ஸாரி. உட்காரு”

உட்கார்ந்தாள்.

ஐந்து நிமிடம் கழித்து மறுபடியும் ஜிப்பை திறக்க போனேன்.திமிறினாள்.

வலுவை சேர்த்து அவளை அடக்கி திறந்து விட்டேன். அவள் க்ஷாலை போர்த்தி , ஜிப்பை ஒரு ஜாண் அளவுக்கு திறந்தேன்.

பளிங்காய் முதுகு தெரிந்தது.

கொஞ்சம் கீழே நகக்கீறலும் பல்தடமும் மாதிரியான தழும்பு.தழும்பை பார்த்தால் அது வலியை கொடுத்திருக்கும் காயம் போல தெரிந்தது.

”ப்ரியா என்னது இது”

“என்னது என்னது”

“இல்ல ஏதோ தழும்பு மாதிரி இருக்கே.”

”ம்ம்ம்...பத்தனைச்சு வருசமா சித்தப்பா வீட்ல இருக்கேன்ல.வீட்ல யாருமே இல்லன்னா சித்தப்பா என்னோட இது மாதிரி விளையாடுவாரு”

அதிர்ச்சியாய் இருந்தது.

“நீ சொல்ல வேண்டியதுதான நாய உங்கம்மா கிட்ட”

“ஒண்ணுமே சொல்ல முடியாதுப்பா.சித்தப்பாதான் பணம் எல்லாத்தையும் கொடுக்கிறார்.அவரும் பலநேரம் நல்லாத்தான் இருப்பார்.என்னைக்காவது வீட்ல யாரும் இல்லன்னா பாய்ஞ்சிருவார்.அப்படியே கிடந்து எந்திருச்சுருவேன்”

அமைதி என்றால் அழ் அமைதி நிலவ ஆரம்பித்தது.

கடலின் அலைகூட சத்தமில்லாமல் அடித்தது போல் இருந்தது.

அவளை இன்னும் இழுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டேன்.

நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

விரலை எடுத்து அவள் முதுகு தழும்பை தொட்டேன்.

தொட்ட அடுத்த கணமே உள்ளே இருந்து கடவுள் வெடிக்க ப்ரியாவை காதலிக்க தொடங்கினேன்.

லவ் யூ ப்ரியா...

3 comments:

  1. இத்தனை நாள் எப்படி உங்க எழுத்தை படிக்காம விட்டேன்?
    நல்லாருக்கு சார்

    ReplyDelete
  2. ப்ரியாவிற்கு இன்னொரு 'சித்தப்பா' கிடைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.பெண்ணின் பலஹீனம் அறிந்து கொள்ளவே ஆண் துடிக்கிறான்.அதுவே அவனது தூண்டிலின் புழு…!

    ReplyDelete
  3. andharangam puriyamaley silaruku kadhal yerpadukirathu kalapokil kandipaga indha priya yematrapaduval

    ReplyDelete