Monday 5 November 2012

ஜேம்ஸ் சார் கவிதை - 7



சண்டை வந்தது.

எழுத்தாளனுக்கும்
அவன் எழுதிய
சிறந்த புத்தகத்துக்கும்.

தீரா வெறுப்பில்
பரஸ்பரம்
துப்பித்தெளித்தனர்.
எச்சிலை.

ஜேம்ஸ் சாரிடம்
வந்தனர் குமறலோடு.

நான் உயிரோடு
இருக்கவேண்டும்
அல்லது என் புத்தகம்
உயிரோடு இருக்க வேண்டும்.
சொல்லி முடிக்கும் முன்
எழுத்தாளனை அடித்து கொன்று
புத்தகத்தை அணைத்து கொண்டார்
ஜேம்ஸ் சார்...



No comments:

Post a Comment