Thursday 19 September 2013

சின்னப்பையனும் கணக்கும்...

கணிதம் எனக்கு ஒரு பிரச்சனையானது மூன்றாம் வகுப்பில்தான்.

மல்டி டிஜிட்ஸ்ஸை சிங்கிள் டிஜிட்டால் பெருக்குவது எனக்கு பிரச்சனையில்லை( 1481 x 3)ஆனால் மல்டி டிஜிட்டை மல்டி டிஜிட்டால் பெருக்குவது ( 567 x 67 ) அந்த வயதில் சுத்தமாக புரியவில்லை..

மேத்ஸ் மிஸ்ஸான மலர் மிஸ்ஸுக்கும் எனக்கும் ஒவ்வாமை வந்தது அந்த கணக்கில்தான்.

கணக்கு என்றால் பயம் வந்ததும் அதில் இருந்துதான்.

நான்காம் வகுப்பில் (ஃப்ராக்சன்ஸ்)பின்னம் புரியவே இல்லை.

1,2,3 போன்ற நம்பர்களோடு டீல் செய்துகொண்டிருந்த என்னை இந்த 1/2,1/4 போன்ற நம்பர்கள் துன்புறுத்தின.

நான்காம் வகுப்பு முழுவருட பரீட்சை எல்லாம் எழுதிமுடித்த பிறகு, ஒரு மதியம் எனக்குள் ஒரு ஃப்ளாக்ஷ் அடித்தது.

1/2 என்றால் அரை ஆப்பிள்.1/4 என்றால் கால் ஆப்பிள்.ஒன்றை இரண்டாக பிரித்தால் அரை வருகிறது. அதனால்தான் ஒன்றை மேலே போட்டு இரண்டை கீழே போட்டிருக்கிறார்கள்.

புரிந்தது புரிந்துவிட்டது.

முதன் முதலில் கணிதம் மேல் ஆர்வம் வர அந்த புரிதலே காரணமாய் இருந்தது.

என் மேத்ஸ் புக்கை எடுத்துப்பார்த்தேன். எல்லா பின்ன நம்பர்களையும் ஆழமாக புரிந்து கொண்டேன்.7/8 என்றால் ஏழு மடங்கை எட்டு மடங்கால் பிரித்தால் என்ன வரும்? இது மாதிரி யோசித்து கொண்டே இருந்தேன்.

அட அது நல்லாத்தான் இருந்தது அந்த ஃபீலிங்.

எந்த ஒரு கணிதமும் பிராக்டிக்கல் சென்ஸ் இல்லாமல் உருவாவதில்லை என்ற தெளிவை பெற்றேன்.

இப்போதும் நன்கு கற்றவர்கள் கூட கேட்பார்கள்

இந்த “மாடர்ன் அல்ஜிப்ரா,காம்ளக்ஸ் நம்பர்” சப்ஜக்டெல்லாம் படித்தால் பிராக்டிக்கலா அதுல என்ன யூஸ்.

ஏழாம வகுப்பில் எனக்கு டார்வின் சுந்தர் என்ற நண்பன் உண்டு. ஃப்ரீ பீரியட்களில் எனக்கும் டார்வின் சுந்தருக்கும் பிடித்த பொழுதுபோக்கு என்னவென்றால் ரஃப் நோட்டில் ஸ்கொயர்களை எழுதுவது.(25 x 25 = 625, 35 x 35 = 1225) என்று ஒன்றிலிருந்து வரிசையாக எழுதி கொண்டே போவோம்.

கிட்டதட்ட ஆயிரம் நம்பர்கள் வரை எழுதினோம்.

நண்பர்களோடு பழக்கமாவது போல் நம்பர்களோடு பழக்கமானது அப்படித்தான்.

வர்க்கமூலம்(ஸ்கொயர் ரூட் ) கண்டுபிடிப்பதும் எங்கள் பொழுது போக்காய் இருந்தது.

எட்டாம் வகுப்பில் ”பொன் உமாபதி” நட்பு கிடைத்தது.

கணக்கு புத்தகத்தில் ”அவுட் ஆஃப் சிலபஸ்” என்று பரிட்சைக்கு வராத ஆனால் கண்க்கை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை விவாதிப்போம்.”பை” 22/7 டிவைட் செய்து கொண்டே இருப்போம்.

அதுவும் நல்ல பொழுது போக்காய் அமைந்தது.

எட்டாம் வகுப்பில் எனக்கு அண்ணன்கள் Trignomentary சொல்லித்தந்தார்கள்.

சைன் தீட்டா, காஸ் தீட்டா, தான் தீட்டா என்று சொல்லவே பெருமையாய் இருந்தது.

புரிந்தே படித்தேன்.

பத்தாம் வகுப்பில் என் முதல் மன்திலி பரிட்சையில் இருந்து பப்ளிக் எக்ஸாம் வரையில் நூற்றுக்கு நூறு எடுத்தேன். ஆம். ஒரு மார்க் கூட குறையவில்லை.அதை என்னுடைய பெரிய சாதனை என்று நண்பர்கள் புகழ்வார்கள்.

பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் முடிந்த பிறகு மூன்று மாதங்கள் லீவு விடுவார்கள்.அந்த லீவில் எனக்கொரு ஆர்வம் தோண்றியது.

மேத்ஸில் புதிதாக எதையாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பதுதான் அது.

இப்போ நம்பர் தியரி இருக்கு, ட்ரிக்ணாமெண்டரி இருக்கு அதுமாதிரி ஏன் நாமளும் கணக்கில் புதுசா எதையாவது கண்டுபிடிக்க கூடாது.

யோசித்தேன் யோசித்தேன் யோசித்தேன்.

- சைக்கிள் ஒட்டிகொண்டு போகும் போது ஏற்றத்தை பார்த்தால் ஒரு சலிப்பும் இறக்கத்தை பார்த்தால் ஒரு ஜாலியும் வருகிறதே. இதை வைத்து ஏதுனா மேத்தமெட்டிக்கல் மாடல் உருவாக்க முடியுமா?

-சில பேருக்கு நல்லா ஒவியம் வரைய வருது, சில பேரால் முடியல் அதபத்தி எதாவது மேத்ஸோட தொடர்பா? ...

- வர்ணங்களை எண்களாக்க முடியுமா? அல்லது மேத்ஸ்ல ரெப்ரஸண்ட் பண்ண முடியுமா? இப்போ மஞ்சளையும் நீலத்தையும் கலக்கினா பச்சை வருது. அது மாதிரி வர்ணங்கள மேத்ஸ்ல ரெப்ரசண்ட் பண்ணினா? என்ன வர்ணத்த கலக்கினா என்னென்னா வர்ணங்கள் கிடைக்கும் அப்படிங்கிறத பேப்பர்ல போட்டே தெரிஞ்சிக்கலாம்.ஒவ்வொரு கலரா மிக்ஸ் பண்ணிகிட்டே இருக்கதேவையில்லைதானே.

இப்படி எதுனா ஒண்ணு யோசிச்சிகிட்டிருப்பேன்.ஆனா புதுசு புதுசா யோசிப்பேன். நிறைய

கிறுக்குத்தனமாத்தான் இருக்கும்.

இருந்தாலும் அந்த யோசிக்கும் சுதந்திரம் கொடுக்கும் கிக்கே தனியானது.

செஸ்ஸில் கணித்தத்தை புகுத்த முடியுமா என்று டிரை ப்ண்ணினேன்.

ராணிக்கு அதிக பாயிண்ட், ராஜாவுக்கு சைபர் பாயிண்ட் ( ஏன் ராஜாவுக்கு சைபர் கொடுத்தேன் என்றால் சைபர் இல்லாமல் எந்த நம்பரும் இல்லை. அது போல் ராஜா இல்லாமல் செஸ்ஸே இல்லைதானே.சைபர் ராஜா ரெண்டுமே கொஞ்சம் அமைதியாத்தானே இருக்கும். எப்படியெல்லாம் யோசிச்சிருக்கேன் பாத்தீங்களா)

அப்புறம் செஸ் போர்டில் நடுவில் இருக்கும் நான்கு கட்டங்களை நீங்கள் ஆக்கிரமித்தால் எளிதாக வெல்லலாம் என்று ஒருவர் டீவியில் சொன்னார்.

அந்த “செண்டிரல் ஸ்குயர்ஸ்க்கு” தனி மதிப்பு கொடுத்தேன்.

இப்படி பேப்பரையும் பேனாவை வைத்து ஒரே ஆராய்ச்சிதான்.

என்னுடைய ஆராய்ச்சிகள் மிகவும் ரகசியமானவை.

அண்ணகளுக்கு தெரியாது. தெரிந்தால் கிண்டால் செய்வான்கள் என்ற வெட்கம்தான் காரணம்.

அப்படியே ஆராய்ச்சி போனது.

கடைசியில் உருப்படியாய் ஒன்றை கண்டுபிடித்ததாய் நினைக்க வைத்ததும் நடந்தது.

ஒரு காலைவேளையில் சைக்கிளில் போய் கொண்டிருக்கும் போது நினைத்தேன்.

நாகர்கோவில் கலெக்டர் ஆபீஸை அதிமிக்கேல் தெருவழியாக போயும் அடையலாம்.ராமவர்மபுரம் போயும் அடையலாம்.சேரும் புள்ளி ஒன்றாய் இருந்தாலும் வழி வேறு வேறுதான்.

அப்படியானல் அந்த இரண்டு வழிகளையும் சமண்பாடு செய்யலாம்.

அட நான் ஒன்று கண்டுபிடித்து விட்டேன்.

நான் ஒன்றை கண்டுபிடித்துவிட்டேன்.

”யல விஜய்யி சரியான ஆள இருக்கியேல.கணக்குலயே புதுசா ஒண்ண கண்டு பிடிச்சிட்டியே.பெரிய மத்தவ்னதாம்ப்ள நீ” என்று பெருமை பட்டுக்கொண்டேன்.

அதைப் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தேன் .ஆனால் அதற்கு மேல் அந்த கணித தத்துவத்தை எப்படி கொண்டு போவது என்று தெரியவில்லை.

பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்றாம் வகுப்பு சேர்ந்து ஒரு மாதம் முடிந்த பிறகு வாத்தியார் “Vector algebra" எடுத்தார்.

ஏ வெக்டார் பிளஸ் பி வெக்டார் இஸ் இம்ளைஸ் சி வெக்டார்.

இப்போ ஒரு புள்ளியை இப்படியும் போய் அடையலாம்.அப்படியும் போய் அடையலாம். எப்படியும் போய் அடையலாம். அதைத்தான் வெக்டார் அல்ஜிப்ரா சொல்ல வருகிறது என்று சொன்னார்.

எனக்குன்னா அதிர்ச்சி.

அது நான் யோசித்து வைத்து இருந்தது.

அட மாக்கான்களா என் கண்டுபிடிப்பை அல்ரெடி நீங்க எல்லாம் சேர்ந்து கண்டுபிடிச்சிட்டீங்களாடா

பாவிகளா.

வெக்டார் அல்ஜிப்ராவாம் வெக்டார் அல்ஜிபரா. என்று கிளாஸை கவனித்து கொண்டிருந்தேன்.

பாக்ராஜ் அந்த ஏழுநாட்களில் சொல்வாரே “இது எண்ட டியூனு எண்ட டியூனு “ என்று. அதுமாதிரியான கூவல் எழுந்தது.

அப்புறம் பிளஸ் ஒன் படிப்பு பளுவினாலும், இண்டகிரேசன் டிப்பிரண்சேசன் கால்குலஸில் ஃப்யில் ஆகும் வரை போனதாலும் என்னுடைய கணிதம் கண்டுபிடிக்கும் ஆர்வம் அதுவாக தற்கொலை செய்து கொண்டது.

பிற்காலத்தில் “ஜான் நாஷ்” என்ற கணித மேதையின் படமான “பீயூட்டியுஃபுல் மைண்ட்” படம் பார்க்கும் போது ஒரு காட்சி ஈர்த்தது.

அதில் ரசல் குரோவ் ( ஜான் நாஷ்) பறவைகளுக்கு தீனி போடுவார்.

எந்த புறா முன்னாடி வந்து அந்த தீவனத்தை உண்கிறது. அதில் எதாவது கணிதம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்வார்.

அவர் நோட்டில் அதை எழுதி வைத்திருப்பார்.

என்னுடைய கணித ஆராய்ச்சி நினைவுக்கு வந்தது.நான் சரியாத்தான் செய்திருக்கிறேன்.

தைரியமாக சிந்திக்கவேண்டியது அறிவியல் மற்றும் கணிதத்தில் முக்கியம்.அதை நான் செய்தே இருக்கிறேன்.

என்னைபோன்ற பல இளம் ஆர்வலர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள், இருந்து கொண்டிருக்கிறார்கள், இருப்பார்கள்.

அதை எப்படி நல்ல புராடக்டாக கன்வெர்ட் செய்கிறோம் என்பதில்தான் இந்தியா வல்லரசாவது இருக்கிறது.

எமெர்சன் வாசித்த “அமரிக்கன் ஸ்காலர்” கட்டுரை அமரிக்காவின் சிந்தனை முறையையே மாற்றியதாம் அல்லது வழிகாட்டியதாம்.

எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதை வாசித்துப்பாருங்கள்.

நாம் இன்னும் நிறைய வளரனும் தம்பி.

1 comment:

  1. ஹாஹா. எல்லோரும் சின்ன வயசில் இப்படித்தான் பல ஆராய்ச்சிகள் மண்டைக்குள்ளயே நடந்து, பல்பு எரிஞ்சு, அப்புறம் மற்ந்தே போயிருக்கு. இன்ட்ரஸ்டிங் நடை

    ReplyDelete