Thursday 22 August 2013

நண்டும் மனிதனும் யானையும் பாம்பும் முதலையும் வரும் கதை...

கதைக்குள் கதை வரும்.நடுநடுவே தலைப்பை வசதிக்காக கொடுத்திருக்கிறேன்.இது ஒரே கதைதான்.

 கொஞ்சம் பொறுமையாக படித்தால் பிடிக்கலாம்....

<நண்டும் திலீபனும்>

திலீபன்,

 ’பாவம் களைய; புண்ணியம் தேட’ கங்கைக்கு நீராடச்   சென்றான்.

அவனைப் பார்த்த நண்டு, “நீ போகும் கங்கைக்கு ,என்னையும்
 கூட்டிப்போ.உன் பையில் தூக்கி வைத்துக்கொள்.கங்கையில் இறக்கிவிடு.நானும் அங்கேதான் போகிறேன்.நீ எனக்கு உதவி செய்தால்.நான் உனக்கு தக்க தருணத்தில் உதவி செய்வேன் என்றது.”.

இதைக் கேட்ட திலீபனுக்கு ஆச்சர்யம் “சின்னச்சிறிய நண்டே.நீ எனக்கு எப்படி உதவி செய்வாய்” என்றது.அதற்கு நண்டு ஒரு கதை சொன்னது.

<யானையும் எலியும்>

ஒரு ஊரில் யானை ஒன்று ஊரின் அரசன் இட்ட குழியில் மாட்டிக்கொண்டது.

எட்டு நாட்கள் அந்தக் குழியில் பட்டினியாய் கிடந்தால் மட்டுமே யானை வழிக்கு வரும் என்று அரசன் யானையை குழியில் விட்டு விட்டு வருகிறான்.

யானை அழுது கொண்டே இருக்கிறது.

அப்போது அந்தப் பக்கம்  வந்த குதிரையிடம் உதவி கேட்டது.குதிரை “யானையே நீ இதுவரை யாருக்காவது உதவி செய்திருக்கிறாயா.அப்படி செய்திருந்தால் அவர்களைக் கூப்பிடு “ என்று சொல்லி ஒடிவிட்டது.

யானை சிந்தித்து சிந்தித்துப் பார்ததது.இறுதியில் ஞாபகம் வந்தது.

ஒருமுறை அரசன். ஊரில் உள்ள எலிகளின் அட்டகாசத்தைத் தாங்க முடியாமல்,அவைகளை மொத்தமாக வளைத்து பெரிய பானையில் போட்டு விடுவான்.

மறுநாள் பானை உடைத்து எலிகளை கொல்லலாம் என்பது அவன் எண்ணம்.

எலிக் கூட்டத்தலைவன் மட்டும் தப்பி தன் கூட்டத்தாரை காப்பாற்ற என்ன வழி என்று யோசிக்கும் போத் அந்தப் பக்கமாக வந்த யானையிடம் “யானையே உன் காலால் இந்தப் பானையை உடைத்து என் சொந்தங்களை காப்பாற்றுங்கள் எனறது.யானையும் பானையை உடைத்து எலிகளைக் காப்பாற்றியது.

இந்த சம்பவம் குழியில் விழுந்த யானைக்கு நினைவு வர, எலிக்கூட்டத் தலைவனை  ஒலி எழுப்பிக் உதவிக்கு அழைத்தது.

அங்கே வந்த எலிக்கூட்டத்தலைவனின் உத்தரவு படி எல்லா எலிகளும் தங்கள் வாயால் மண்ணைக் கிள்ளி யானை மாட்டிக்க்கொண்ட குழியினுள் போட்டன.எலிக் கூட்டம் மண்ணை நிரப்பிதால் யானை வெளியே வந்தது. அரசனிடம் இருந்து தப்பித்தது.

இந்தக் கதையை சொன்ன நண்டு “ஆகையால் திலீபனே.உருவத்தை கொண்டு எடை போடாதே.சிறிய எலிகளால் கூட யானைக்கும் உதவி செய்ய முடியும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்.என்றது

<நண்டு காக்கை பாம்பு திலீபன்>

திலீபனும் நண்டை எடுத்து பையினுள் போட்டு யாத்திரையை தொடர்ந்தான்.

ஒரு ஆலமரத்தின் அடியில் அசதியில் தூங்குகிறான்.

அந்த ஆலமரத்தில் ஒரு காக்கா உண்டு.அது மரத்தின் கிழே யாராவது வழிப்போக்கர்கள் வந்தால் ஒரு குரல் கொடுக்கும். அந்தக் குரலைக் கேட்டவுடன் பொந்திலிருக்கும் பாம்பு வந்து உறங்கிக் கொண்டிருப்பவனை கடித்து விடும்.

அவன் இறந்த பிறகு காக்கை தன் இனத்தையெல்லாம் கூப்பிட்டு மனிதனை உண்ணும்.இதற்கு பரிசாக காக்கை பாம்பிற்கு எலிகளை பிடித்துக் குடுக்கும்.

இது தெரியாமல் திலீபன் தூங்கிக் கொண்டிருக்க, பாம்பு அவனைக் கடித்து கொல்கிறது.இதை திலீபன் பையில் இருந்த நண்டு இதனைப் பார்த்து விடுகிறது.

திலீபனின் உடலைக் கொத்தவரும் காக்கைத் தலைவனின் கழுத்தை பிடித்துக் கொள்கிறது நண்டு.

நண்டியின் பிடியில் இருந்து  காக்கையால் தப்ப முடியவில்லை.

நண்டு பாம்பை நோக்கி “பாம்பே நீ திலீபனின் உடலில் இருக்கும் விஷத்தை உறிந்து காப்பாற்று இல்லாவிட்டால் இந்தக் காக்கையின் கழுத்தை நெரித்துக் கொள்வேன்.” காக்கையின் உயிரைக் காப்பாற்ற பாம்பும் திலீபனின் உடல் விஷத்தை உறிஞ்சி காப்பாற்றி விடுகிறது. திலீபன் எழுந்து தன்னை உயிர் பிழைக்க வைத்த நண்டுக்கு நன்றியை சொல்கிறான்.

சிறிய உயிரினமாய் இருப்பினும் உதவி செய்ததே என்று ஆச்சர்யப்படுகிறான்.

நண்டு திலீபனை நோக்கி ‘ நீ பொறுமையாய் ஆச்சர்யப்படு மனிதனே. இப்போது இந்தக் காக்கையை என்ன செய்வது? விட்டுவிடவா அல்லது கொடுக்கால் நெரித்துக் கொல்லவா”என்று கேட்க

அதற்கு திலீபன் ‘நண்டே நண்டே.நாம்தான் பிழைத்து விட்டோமே.பிறகு ஏன் காக்கையை கொல்ல வேண்டும்.விட்டுவிடு” என்று சொல்கிறான்.

நண்டு திலீபனிடம் “நான் விடுவதற்கு முன் ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்று சொல்ல ஆரம்பித்தது.

<மனிதனும் முதலையும்>

“ஏழை ஒருவன் ஆற்றங்கரையை நோக்கிப் போக,அங்கே வந்த முதலையொன்று, ’மனிதனே நிலத்தில் நான் பலம் குறைந்தவன்.உன்னை உன்னிடம் உள்ள நீண்ட தோல்பையினுள் வைத்து தூக்கிப்போ.தூக்கிப்போய் ஆற்றிவிட்டால் நன்றியுடையவனாய் இருப்பேன்” என்றது.

முதலையிடம் இரக்கப்பட்ட மனிதன்,அதை தூக்கி சுமந்து ஆற்றில் விட்டான்.

ஆற்றில் விட்டதும் முதலை மனிதனின் காலை பிடித்துக் கொண்டது.தனக்கு ஞாயம் அநியாயம் அறம் என்று எதுவும் கிடையாதென்றும், தனக்கு உதவி செய்தால் கூட மனிதனை சாப்பிடப்போவதாகவும் சொல்கிறது.

மனிதன் கூக்குரலிடுகிறான்.அவன் குரலைக் கேட்டு அங்கே நரியொன்று வந்தது.

நரியிடம் முதலையும் மனிதனும் நீதி கேட்டுப்போனார்கள்.

மனிதன் சொன்னான் நான் உதவி செய்தேன் என்று.

முதலை சொன்னது ’என்னுடைய இனத்தில் துரோகம் என்பதே கிடையாது. உதவி செய்தால் கூட அவனை கொன்று தின்றால் அது எங்கள் இனத்தின் குணமே அன்றி வெறுக்கப்படும் விசயமல்ல. என்று வாதாடியது.

நரி யோசித்து.முதலையிடம் ‘நீ எப்படி பையினுள் முதலில் இருந்தாய் செய்து காட்டு “ என்றது. முதலையும் போய் தன்னை அடைத்து வைத்திருந்த பையினுள் போய் உட்கார்ந்து கொண்டது.

உடனே பையை இறுக்க கயிறால் கட்டிய நரி, பெரிய கல்லால் முதலையை அடித்து கொன்றது.

பின் ஏழையிடம் “இப்படி ஏமாளியாய் இருக்காதே.தேவைப்படும் இடத்தில் இரக்கம் காட்டாதே என்றது.

இதைக் கேட்ட திலீபன் “ஆம் இந்தக் காக்கை விட்டுவைத்தால் இன்னும் பலரை கொன்றுவிடக் கூடும்.நமக்கே கூட ஆபத்தாய் முடியும் “ என்றான்.

தன் கொடுக்கால்  காக்கையை, நண்டு நிதானமாக கொன்று போட்டது.

No comments:

Post a Comment