Saturday 6 July 2013

சாரு நிவேதிதாவின் அடியாட்கள்...

சாரு இரண்டு நாட்கள் முன்னால் “ரவுத்திரம் பழகு” என்றொரு பத்தி எழுதியிருந்தார். அதில் தன்னை அவமானப்படுத்தும் மற்றவர்களை வாசகர்களாகிய நீங்கள் ஏன் என்னவென்று ரவுத்திரம் பழக வேண்டாமா என்று கேட்டிருந்தார்.

அது கேட்டு அவர் அடியாட்களில் (வாசகர்கள் இருக்கிறார்கள்.நான் சொல்வது அடியாட்கள்) பலருக்கு என்ன செய்யலாம்? தலைவருக்கு எதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது.

இது எல்லாம் தெரியாமல் நான் சாரு தன்னுடைய ஆளுமையை முன்னிறத்த சரிவர தெரியாமல் இருக்கும் மனிதர் என்று விமர்சிக்க போக,

சினம் கொண்ட வீரனாக நம் டேய் மனோ எப்படி கமெண்ட் போட்டிருக்கிறார் பாருங்கள். இதுதான் சாருவின் எழுத்தின் வெற்றி. இப்போது டேய் மனோவின் கமெண்ட்.

<<எப்போதும் எதிர் கருத்து சொல்றவனுகள விடமோசமான முட்டாள்கள் இந்த நடுநிலைவாதிகள்... அதிலும் என்னைப் பொறுத்தவரை அடி முட்டாள் நீ. இப்படியெல்லாம் ஸ்டேடஸ் போட்டு யாருக்கு சொறிஞ்சு விட்டு என்ன ஆகப் போகுது... போய்யா நீயும் உன் மயிரு கருத்தும்.>>

இவ்வளவு இனிமையான கமெண்ட்டை நான் பார்த்தே இல்லை. இதில் Charu Nivedita வின் வெற்றி எங்கு வருகிறது என்றால், இதே டேய் மனோ என்னுடைய நட்பான புதிதில் “பாஸ் உங்க பதிவுகள் அருமை. என்னால் லைக்கே போட முடியவில்லை. என்ன பிரச்சனை என்று புரியவில்லை” என்னிடம் விவாதித்திருப்பார் இன்பாக்ஸில்.

இப்போது “போய்யா நீயும் உன் மயிரு கருத்தும்” . எப்படி பாருங்கள் என் கருத்து மயிராம். சாரு சொல்வது மட்டும் டேய் மனோவுக்கு உயிராம்.( எதுகை எதுகை).

Charu Nivedita உங்களுடைய ‘ரவுத்திரம் பழகு’ பத்தியின் வெற்றிகளில் இதுவும் ஒன்று.

இன்னும் பல டேய் மனோக்கள் இப்படி வரவேண்டும் சாருவின் உள்ளம் குளிர வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

ஜெயமோகன் ‘தட்டைத்தமிழன்’ என்று சொன்னது மாதிரி டேய் மனோ போன்றவர்களை “சாரு தமிழன்” என்று கூற ஆசைப்படுகிறேன்.

இது போன்று இன்னும் கோணல் பக்கங்களை மட்டும் படித்து பல புதிய சாருதமிழன்கள் வருவார்கள்.சாருவுக்கு பணமும், அடியாள் வேலையும் செய்வார்கள்.

சாரு அப்படியே வாழ்க்கையை ஒட்டுவார்.

சாருவுக்கு ஜாலிதான். நீங்க கலக்குங்க சாரு... 

No comments:

Post a Comment