Sunday 29 January 2017

அம்பேத்கரின் மக்கள்தொகை பார்வை

காந்தியர்கள் புலனடக்கத்தாலும் பிரம்மசரியத்தாலும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்ல,
இந்து மத அமைப்புகள் கடவுள் கொடுப்பதை தடுக்க நாம் யார் என்று சொல்ல,
முஸ்லிம் அமைப்புகள் அது எங்கள் மதத்துக்கு எதிரானது என்று சொல்ல,
கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவத்தை அகற்றினாலே மக்களுக்கு செல்வம் கிடைக்கும், அதற்கு குடும்ப கட்டுப்பாடு திட்டம் தேவையில்லை என்று சொல்ல,
அப்போதைய பொருளாதார வல்லுனர்கள் கூட குடும்பக் கட்டுபபாடு என்பது கட்டாயம் தேவையில்லை. நாட்டின் உற்பத்தியை பெருக்கினாலே போதும் என்று சொல்ல,
இல்லை இல்லை குடும்பக் கட்டுப்பாடும், குடும்ப நலன் திட்டங்களும் மட்டுமே இந்தியாவை உயர்த்தும் முக்கிய காரணிகளாகும்,
அதைத்தான் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று இந்தியர்களிடமும் இந்திய அரசியல்வாதிகளிடம் திரும்ப திரும்ப வலியுறுத்தினவர்
அம்பேத்கர்.

No comments:

Post a Comment