Sunday 21 October 2012

கலவி செய் சிலந்திகளை...

கலவி செய் சிலந்திகளை
கவ்வி விழுங்கியது ஒணான்.

முக்கி களைத்து முட்டையிட்டு
சக்தி திரட்டி காத்தல் இல்லை.

தாய்மை- தியாகம்
ஆண்மை-அரண்

எதுவுமில்லை;வாரிசு வராது.

எச்சிலெடுத்து வலை பின்னக்
கற்றுக் கொடுக்கும் கக்ஷ்டமில்லை.

முற்றி முதிர்ந்து, கால் உதிர்ந்து
வற்றி மடியும் அழிவில்லை.

கூடலில் கனலாய் காய்ந்து
உடலுள் உடலும் இணைந்து,

உள்ளே உள்ளம் ஒன்றி
இன்பத் திளைப்பில் மரணம்

ஒணான் இறை அவதாரம்!

No comments:

Post a Comment